Friday, September 26, 2025

யாருடைய துகள் நாம்?

"சீதக்காதி" திரைப்படத்தில் வருவது போன்று "கலைக்கும் கலைஞனுக்கும் மரணமில்லை" தான்.

அதே போன்று நம் முன்னோர்களுக்கும் மரணமில்லை தானே. நம் அம்மா, அப்பா, அவர்களின் பெற்றோர்கள், அவர்களின் பெற்றோர்கள் என எவருக்கும் நிரந்திர மரணமில்லை என்பதை உணர்த்துவதாகத்தான் "அவன் துகள் நீயா.. அவன் தழல் நீயா.." என்ற பாடல் ஒலிப்பதாக எனக்கு ஒவ்வொரு முறையும் தோன்றும்.

நம் ஒவ்வொருவருக்குள்ளும் நம் முன்னோர்களின் நிழல் இருக்கும். அதனை தான் அறிவியல் மரபியல் மூலம் நிரூபிக்கிறது. மரபியல் வழியாக கொஞ்சமும், பழக்க வழக்கங்கள் வழி மிச்சமும் குணநலன்கள் அனைத்தும் கடத்தப்படுகின்றன. 

நான் வெளிப்படையாக இருக்கும் போது "நீ உன் அப்பா வழி தாத்தாவே தான்," என்று சொல்வார்கள். கோபப்படும் போது "உன் அம்மா பெத்த தாத்தா தான் நீ," இப்படி நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் யாரோ ஒருவர் இருக்கத்தானே செய்கிறார். நம் அம்மாவோ, அப்பாவோ, தாத்தாவோ, பாட்டியோ, ஆசிரியரோ, அதிகாரியோ! ஏன் நாம் படிக்கும் புத்தகங்கள், பார்க்கும் மனிதர்கள், இரசிக்கும் ஆளுமைகள், கடந்து செல்லும் உறவுகள், உடன் பயணிப்பவர்கள், நம் விரோதிகள் என எல்லாராலும் ஆனது தான் நாம்! அதனை அப்பாடலின் ஒவ்வொரு வரியிலும் உணர முடியும்.

யாருடைய அடையாளமோ நம்மிடம் இருந்து கொண்டே தான் இருக்கும். அது நல்ல குணநலனா கெட்டவையா என்பது தான் யோசிக்க வேண்டியது. எந்த ஒருவரும் முழுமையாக தனித்த அடையாளத்துடன் இருக்கவே முடியாது. 

நான் யாருடைய துகளெல்லாம் கொண்டுள்ளேன் என்பது எனக்கு ஓரளவுக்குத் தெரியும். நீங்கள் யோசித்திருக்கிறீர்களா!? 

சீதக்காதி - கலை, கலைஞன், மரணம்!

சீதக்காதி என்று ஒரு தமிழ் திரைப்படம். பெரிய வெற்றிப்படம் அல்ல. முதல் பாதியின் ஒரு பகுதி சோகமாகவும், அதனைத் தொடர்ந்து நகைச்சுவையாகவும், இறுதியில் சற்று ஆழமாகவும் எனக்குத் தோன்றிய படம். பிடித்த படங்களில் ஒன்றும் கூட. 

 Avan Lyrics in Tamil, Seethakaathi (Original Motion Picture Soundtrack) Avan  Song Lyrics in English Online on Gaana.com

PC: google images

ஒரு கலைஞன் அவனின் மரணத்திற்குப் பிறகும் வாழ்கிறான். அந்த கலையின் வடிவில் அல்லது அவனைப் போன்ற ஒரு கலைஞனின் உடலில். எதுவாகினும் கலைஞனுக்கு மரணமில்லை. இதுவே அப்படத்தின் மையக்கரு.  இப்பொருள் ஒரு மனிதனின் வாழ்க்கையை ஆழமாக சிந்திக்க வைக்கக்கூடும். அதனை மிகுந்த நகைச்சுவையோடு கையாண்டிருப்பார்கள்.

இப்படத்தில் ஒரு நாடகக் கலைஞர் ("ஐயா" என்று அழைக்கப்படுபவர்) அவரின் மரணத்திற்குப் பிறகு அக்கலையை உண்மையில் நேசிக்கும் இன்னொரு நாடகக் கலைஞரின் ஆன்மாக்குள் புகுந்து, வசித்து தன்னைப் போலவே அவ்வுடலையும்  நாடகக் கலைக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட வைப்பதாக அமைந்திருக்கும். இதை தட்டச்சு செய்யும் போதே ஏனோ எனக்குள் கனமாக உள்ளது. 

அப்படத்தில் ஒரு பாடல்:

"அவன் துகள் நீயா.. அவன் தழல் நீயா.. அவன் நிழல் நீயா.. அவனே நீயா....!!!" (பாடல் முழுமையுமே அற்புதம் தான்!!!) 💖

தனக்கு பின்னர் தோன்றியுள்ள திறமையான நாடகக் கலைஞர்கள் அனைவருக்குள்ளும் "ஐயா" புகுந்துள்ளார். அவரின் துகளும், தழலும், நிழலும் அக்கலைஞர்களிடம் உள்ளது. தன் குருவின் (நேரடியாகவோ, மறைமுகமாகவோ) தாக்கம் சிஷ்யர்களிடம் இருப்பதாக இதை பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். 

கலையும், கலைஞர்களும் அவ்வாறே! இரண்டிற்கும் மரணமில்லை தான்.

ஆனால் இது ஒவ்வொரு தனி நபருக்குள்ளும் நிகழக்கூடியது தானே!! கலைஞர்களுக்கு மட்டுமல்ல!!

தொடரும்.... 

Thursday, September 25, 2025

How do you 'save' your contacts?! 😉

We meet someone for the first time.

We exchange numbers as we interact, not knowing if this acquaintance would grow into a relationship or not.

We save each others' numbers, not knowing if this person would become a friend or foe.😍

We save numbers with their actual names, in fact with partial address so that we do not forget who that person is! 😊

That person happens to grow as a friend. Later as a confidante. Now, do we really change their names in the contact??!! 😌

Yes and No!😃

 Cell Phone Contact List Stock Illustrations – 281 Cell Phone Contact List  Stock Illustrations, Vectors & Clipart - Dreamstime

                                                                                                                          PC: google images

When we are young adults, we do give importance to how we 'save' our contacts. But as we grow into full adulthood and thereon, we do not! 😖

Some names when popped up on screen remind us that we hadn't changed their names to just names or nick names, despite having got closer. Is it because we find it as an extra work to edit contact or we do not give a damn to all such trivial matters, as we grow older?? 😛

Not sure! 😏

But we DO take a few seconds to edit some contacts as they stay closer to our hearts or keep getting closer to that tiny teeny private space within us. Otherwise even though the relationship stays healthy and good, many a time we do not take that effort and that indicates something about us or the other person.

Do we really need to give attention to this fact or is it something we could let pass??😀

I am somewhere in the middle! You? 😉

P.S. There are people who save almost every contact with a nick name, leaving others to wonder who is who when they are forced to use their mobile! That is weird!  😕

Saturday, September 6, 2025

Who Wrote the Indian Constitution? 💭

"Who wrote the Indian Constitution?" - If this question was asked to me, I would have straight away said "Dr Ambedkar", not knowing the difference between wrote & drafted.

For long long years, I did not know that a team of experts were involved in drafting of our Constitution. I think my books in school did not make it clear about the team work. I was taught that Dr Ambedkar drafted the Constitution. He led that team and his role is the most significant and that much one knows. But somehow we miss out on other experts.

This being on one side, it never occurred to me to even think as to how the drafted Constitution was put to paper in the final form. As students we were not supposed to think deeper; instead answers were readily available to all tailor-made questions.

We recently bought a book for our library - Hands That Wrote History - where we get to know that the whole draft of the Indian Constitution was written by Prem Behari Narain Raizada!!!!

google images

Anyone that reads this book would be awestruck to learn that Jawaharlal Nehru called Prem and requested him to write in his own beautiful handwriting. Prem was a calligraphy artist who learnt it from his grandfather. He felt honored to be called by the Prime Minister himself and to be ever given a place in history that "Prem's hands wrote the Constitution." He agreed! You won't believe that this book carries details such as the number of nibs Prem had used to write our 250+ pages of Constitution.

Calligraphy is not considered great anymore as most of this work can be easily done by computers/AI nowadays. Yet, handwriting and beautiful handwriting have their own unique space. This book would tell our kids that one would never know when their talent would be recognized and how!!

It surely is an exciting read for kids and also adults. 

இயற்கையோ, இறையோ !!! 💖

ஒரு நாள் விடியற் காலையில் கிருஷ்ணம்மாள் ஆச்சியை சந்திக்க கிளம்பிக்கொண்டிருந்தேன். பயணத்திலோ தங்குமிடத்திலோ வாசிக்க புத்தகம் ஒன்றை என் பையில் வைத்தேன். அப்புத்தகத்திற்கு ஒரு புக் மார்க்கினை எடுப்பதற்கு அந்த அறைக்குச் சென்று விளக்கு எதுவும் போடாமல் அந்த புக்மார்க் பெட்டில் கைவிட்டு ஒன்றை எடுத்தேன். அது 'தன்னறம்' பதிப்பகத்தினுடையதாக இருந்தது. அதில் எழுதியிருந்தது வினோபாவின் வரிகள்: "when a thing is true, there is no need to use any arguments to substantiate it ."

அந்த இருட்டில் என் கையில் இந்த வரி கிடைத்தது தற்செயல் போன்று இருந்தாலும், எனக்கு நான் வணங்கும் இறையின் அறிவுரையாகப்பட்டது. ஏனெனில் அந்த காலைக்கு முந்தைய இரவு ஒருவரிடம் உண்மையை உரக்கச் சொல்லியே தீருவேன் என என்னுடைய 20 நிமிடத்தை செலவழித்தேன். ஒரு வேளை இயற்கை "நீ ஏன் உன் மூச்சைப் பிடித்திக் கொண்டு செவி சாய்க்க விருப்பமோ எண்ணமோ இல்லாதவர்களிடம் உண்மையை புரிய வைக்க முயற்சித்தாய்?" என்று கேட்பது போன்றே இருந்தது. 

பையில் வைத்துக் கொண்டு பயணப்பட்டேன். ஆச்சியை காணப்போன இடத்தில் மூன்றாவது முறையாக ஏதேச்சையாக ஒருவரை (மனதுக்குப் பிடித்த நாங்கள் மதிக்கும் நபர்) சந்திக்க நேர்ந்தது. அதுவும் இயற்கையின் செயல்தான். ஒத்த எண்ணம் உடையவர்கள் சந்தித்து மகிழ்வது இயல்பாக நடந்துக் கொண்டே இருக்கும் என்பதற்கு சாட்சி.

அவரிடம் அன்பு பாராட்டி அந்த அறைக்குள் நடக்க தொடங்கியவுடன் அவர் "நான் உங்களுக்கு சில புகைப்படங்களைக் காண்பிக்கிறேன்," என்றார். அவர் குறிப்பிட்ட புகைப்படங்களைப் பார்த்துகொண்டே நடந்த என்னிடம் வேறொரு இடத்தைக் காட்டி, "நீங்க அந்த படத்தை முதலில் பார்த்து விட்டு வாங்க. ரொம்ப அருமையா இருக்கும்," என்றார். 

என் பையில் நான் வைத்த புக்மார்க் ஒரு பெரிய புகைப்படமாக என் முன்னால். வினோபாவின் அந்த வரிகள் மட்டும் தமிழில்; "செயல் உண்மையாக அமைந்துவிடுகையில் அதனை மெய்ப்பிப்பதற்கான வாதங்கள் தேவையில்லை."


என்னால் அதிலிருந்து உடனே மீள முடியவில்லை. சுற்றி இருந்தவர்களிடம் நான் பையில் வைத்திருந்த அந்த புக்மார்க்கை காட்டி என் ஆச்சரியத்தைப்பகிர்கிறேன். நம்மைச் சுற்றியுள்ள ஆச்சரியங்களை சரியான வார்த்தைகளில் விவரித்துவிட முடியுமா என்ன!!!

மீண்டும் மீண்டும் இயற்கையோ இறையோ என்னிடம் சொல்ல வருவது ஒன்று தான் என நான் உணர்ந்து கொள்கிறேன். "நீ துன்பப்படுகிறாய், உன் நியாயத்தை கூச்சல் போட்டு சொல்ல நினைக்கிறாய். வேண்டாம், செய்யாதே! உன் உண்மை உனக்காகப் பேசும்!"

இதனை நான் செயல்படுத்துவதற்கு காலமாகலாம். அது வரை நான் கூச்சலிட்டுக்கொண்டே இருக்காலாம். ஆனாலும் இயன்ற வரை இறை எனக்கு அளித்த அரிவுரையை ஏற்று நடக்கத் தொடங்கியதுமே மனது லேசாகத் தொடங்கியுள்ளது.💟

அரசுப் பள்ளி டைரிக் குறிப்புகள் - 5

என் மகள் பயிலும் அரசு பள்ளியில் வளாகத் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்ட போது அங்கு இருந்த ஒரு மரத்தின் ஒரு பகுதியை வெட்ட முடிவு செய்யப்படுவதாக ஆசிரியர்களும் தூய்மைப் பணியாளர்களும் பேசிக் கொள்வதை மாணவர்கள் கேட்டுள்ளனர்.

இவர்களுக்கோ அவ்வாறு வெட்டுவதில் விருப்பமில்லை. ஆசிரியர்களிடம் சொல்லியுள்ளனர். ஆசிரியரோ அதனை வெட்டுவதன் அவசியத்தை எடுத்துக் கூறியுள்ளார். மாணவர்களால் மேற்கொண்டு என்ன பேசுவது, என்ன செய்வது என்று தெரியாமல் விட்டுவிட்டனர். மீண்டும் சற்று நேரம் கழித்து அதே சிந்தனையில் இருந்துள்ளனர்.

"நாம் ஏன் 'மாணவர் மனசு' பெட்டியில் எழுதிப் போடக்கூடாது?" என்று யோசித்துள்ளனர். அனைவரும் ஒப்புக்கொள்ள மாணவர்கள் ஒரு கடிதத்தினை எழுதி அதனை 'மாணவர் மனசு' பெட்டியில் போட்டுள்ளனர்.

 
google images

இச்சம்பவத்தை என் மகள் வீட்டில் சொன்னவுடன் பெருமையாக இருந்தது. ஒன்று மரத்தினை பாதுகாக்க குழந்தைகள் நினைத்துள்ளனர். மற்றொன்று தங்களின் எண்ணத்தை நேரடியாக ஆசிரியர்களிடம் சொல்லியுள்ளனர்; அதனை விடவும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் தங்களின் மனதில் எழும் எதையும் 'மாணவர் மனசு' என்ற பெட்டியில் போடலாம் என்ற அரசின் முன்னெடுப்பினை அக்குழந்தைகள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

இன்று வரை என் எண்ணத்தில் தோன்றும் பிரச்சனைகளை தைரியமாக பேச கற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அதை ஒரு அரசுப் பள்ளி போகிறப்போக்கில் செய்கிறது, அவ்வாறு குறைகளை எழுதிப் போடும் குழந்தைகளை தண்டிக்காமல்! 💗

அரசுப் பள்ளி டைரிக் குறிப்புகள் - 4

ஒரு அரசு பள்ளியின் காலை வழிப்பாட்டின் போது நடந்த சம்பவம்

"மேடம், எனக்கு இவ்வளவு Homework கொடுத்தீங்க..... நான் அடுத்த வருஷம் வேறொரு schoolக்கு பொயிடுவேன்," என்றான் ஒரு ஒன்றாம் வகுப்பு மாணவன்.

"என்னடா சொல்ற?" என்றார் ஆசிரியர்.

"ஆமாம். எனக்கு நிறைய குடுக்குறீங்க," என்றான்.

"யாருடா அப்படி சொன்னது? அம்மாவா அப்பாவா?"

"இல்ல, நானே தான் முடிவு பண்ணேன்."

ஆசிரியருக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் தொற்றிக்கொள்ள பெற்றோரிடம் இதனைப் பற்றிக் கேட்டு தெளிவு பெற்றுள்ளார்.

மேற்குறிப்பிட்ட அனைத்தும் ஜனநாயக வகுப்பறைகளில் மட்டுமே சாத்தியம்.

அப்படியான ஜனநாயகத்தன்மை அரசுப்பள்ளியிலே உள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்வு உள்ளது.

குழந்தையும் தான் நினைத்ததை பேச முடிகிறது. ஆசிரியர்களும் அதனை சரியாக உள்வாங்கும் தன்மையுடன் இருக்கின்றனர்.

                                           google images

இதே சம்பவத்தை ஒரு தனியார் பள்ளியில் நினைத்துப்பார்த்தால், ஒரு ஒன்றாம் வகுப்பு மாணவனால் இதனை சொல்லவும் முடியாது; அப்படியே சொன்னாலும் அது ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளப்படாது என்பது தான் யதார்த்தம்.

 

Friday, August 22, 2025

Let's find our Totem 😊😘😍

I got introduced to this term "Totem" recently from a book on co-existence of human and nature.

 Totem Poles and Visitor Centre at Brockton Point (yakdzi myth, wakias,  nhe-is-bik), Vancouver BC • Vancouver Heritage Foundation | Vancouver  Heritage Site Finder

 PC: Google Images

Totem is a natural thing such as a plant, animal, bird or river or any of that kind with which a tribe or community or individuals (believe to) have a spiritual connection. 🌱🌲🌳🌷🍂🐾

During the first reading and understanding of this term, it felt more like one’s connection with family deity. But this is not just it. It is in culture of some tribes in India and across the world, where they build a deep connection with nature.

It is passed on from generation to generation. This spiritual connection brings human beings closer to nature and it teaches/reminds them to be responsible towards nature. It reiterates the fact that we are just co-habitants of the earth and have little or no authority over other natural beings. 💥

For example, if there is a clan in which a family’s Totem is goat, they never harm the animal. Similarly, if one’s Totem is a neem tree, it becomes their life’s mission to plant more neem trees and not cut even a single one in their entire lifetime, come what may. 🙌

It is so fascinating to know this term. Moreover, sound of the term is beautiful in itself.

I was asking my husband what our Totem was.  Amidst many things, discovering our Totem would give an extra purpose to live and would add some extra beauty to living, wouldn’t it?

I will soon find mine. 

Do you have one? Or will you find one and share it with me?💗

I would truly be glad and excited to hear from you! 💖

Thursday, August 21, 2025

பாப்ளர் மரத்திற்கு ஏன் அந்த பெயர் தெரியுமா?

தினமும் இரவில் கதை சொல்வது வழக்கம். சென்ற வாரத்தில் ஒரு இரவில் ஒரு இரஷ்ய நாட்டுக் கதையினை சொல்லத் தொடங்கினேன். கதையின் தொடக்கமாக

“ஒரு அழகான இரஷ்ய கிராமம். மலை அடிவாரத்தில் இருந்தது. அந்த மலையின் உச்சியில் உயரமான இரண்டு பாப்ளர் மரங்கள். அந்த கிராமத்தின் எந்த பக்கத்திலிருந்து பார்த்தாலும் அந்த இரண்டு பாப்ளர் மரங்கள் தெரியும். அந்த ஊருக்கே அடையாளமாக அம்மரங்கள் இருந்தன என்றும் கூட சொல்லலாம்,” என்றேன்.

உடனே என் மகள், “அதனால தான் அந்த பெயரா?” என்றாள்.

“என்ன பெயர்?” என்றேன்.

“பாப்ளர்,” என்றாள்.

“புரியல,” என்றேன்.

“இல்லம்மா, அந்த மரம் ஊருக்கே தெரியது, அடையாளமா இருக்கு. அப்போ அந்த மரம் popular தானே! அதான் அந்த மரத்துக்கு பாப்ளர்னு பெயர் வெச்சிருக்காங்க,” என்றாள்.

“Wow,” என்றேன்.😍🤩

அகரம் - தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி

அகரம் அறக்கட்டளையானது தன் 'விதை' என்ற முன்னெடுப்பை எடுத்து 15 ஆண்டுகள் நிறைவுற்றதைக் கொண்டாடும் விதமாக விஜய் தொலைக்காட்சியில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது.😍

அகரம் அறக்கட்டளை வாயிலாக பயனடைந்த மாணவர்கள் தங்களின் வாழ்க்கைப் போராட்டத்தினையும், தங்கள் அனுபவங்களையும், அகரம் அறக்கட்டளை தங்களின் வாழ்க்கைப் பாதையினை அமைத்துக் கொடுத்தது பற்றியும் உணர்ச்சிப் பொங்க விவரித்தனர். 

 Agaram Suriya-vin Kalviye Aayutham 15-08-2025 Independence Day Vijay Tv  Show • TamilDhool

அந்நிகழ்ச்சியினை பார்க்க மனபலம் நிச்சயம் தேவை. ஒவ்வொரு மாணவரின் வாழ்க்கையும் ஒரு பாடம் தான். கோடிக் கணக்கில் சம்பாதிக்கும் நடிகர் சூர்யா தொடங்கி, பல தொழிலதிபர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஊரில் உள்ள பெரியவர்கள், தன்னார்வலர்கள் என பலர் கூடி இந்த 'விதை' என்னும் தேரினை இழுத்து வருகின்றனர். இதில் ஆட்டோ அண்ணாக்களும், தபால் துறை சார்ந்தவகளும் உள்ளனர். அந்நிகழ்ச்சி நான் கிராமப்புறத்தில் வேறொரு அரசு சாரா அமைப்புடன் செயல்பட்ட அனுபவத்தை மீண்டும் கண்முன் காட்டியது. கண்ணீரை அடக்க முடியவில்லை.  கணவரின் கண்களும் கலங்கியே இருந்தது. 

சற்று நேரத்திற்கு முன்பு வரை வேறு அலைவரிசைக்கு மாற்றும்படி கேட்டுக்கொண்டிருந்தவள், இருவரும் கலங்கியிருந்ததைப் பார்த்து "இது நிஜமா நடந்ததா?" என்றாள். தொலைக்காட்சியில் எந்த படம் பார்த்தாலும் "இது நிஜமா நடந்ததா?" என்ற கேள்வியினை எப்போதும் கேட்பாள். சினிமா என்பது உண்மையா பொய்யா, நடிப்பா, நிஜமா போன்ற வினாக்கள் குழந்தைகளிடம் இருப்பது இயல்பு தான். அது போன்றுதான் இவளுக்கும்.

நான் "நிஜம் பாப்பா. அந்த அக்கா, அண்ணாக்கு நிஜமா நடந்தத தான் நமக்கு சொல்றாங்க. அதுக்கு Help பண்ணவங்க தான் அங்க உக்காந்துட்டிருக்காங்க," என்று சொன்னேன். 😇

ஒரு நொடிக்கூட யோசனையில்லாமல், "இது சினிமா மாதிரி இல்லம்மா. இது தான் Super, நிஜமா இருக்கு," என்றாள்.  💗

Monday, August 4, 2025

அன்றாட வாழ்க்கையில் புத்தகங்கள் செய்யும் மாயம்! 😘

கடந்த மூன்று மாதங்களாக பணியிடத்தில் அழுத்தம் அதிகம். இரண்டு வருடங்களாக எனச் சொன்னாலும் தப்பில்லை. பொய் புகார்களும், மொட்டைக் கடுதாசிகளும், விசாரணைகளும் என பல நிகழ்ச்சிகள் நிகழந்த வண்ணம் உள்ளன. அதிகாரிகள், உடன் பணிபுரிபவர்கள், சற்றும் தொடர்பில்லாதவர்கள் என அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து நம் மீது ஏதேனும் ஒரு புகாரை சொல்லிக் கொண்டும், எழுதி போட்டுக் கொண்டும் இருக்கும் போது, நாம் செய்வதற்கு என்ன உள்ளது?? 😵

புலம்பலுக்கு எப்போதும் கதவு திறந்திருப்பது குடும்பத்தில் தான். கணவரிடம் புலம்பியவாறே நாட்கள் நகர்கிறது. தன்னால் இயன்ற வரை அவரும் பொறுமையுடன் கேட்டு வருகிறார். உடன் எங்களின் மகளும். பல பிரச்சனைகள் அவளுக்கும் தெரியும். அவள் தெரிந்துக் கொள்வதும் அவசியம் என்று தான் கருதுகிறேன். ஒரு பெண்ணுக்கு பணியிடம் அவ்வளவு சுலபமானதில்லை என்பதை அவள் அறிகிறாள்.  அதுவும் நேர்மையுடனும், நேர்க்கொண்ட பார்வையுடனும் பணியாற்றுவதால் ஏற்படும் சிக்கல்களும், அப்போது நமக்கு தேவைப்படும் ஆறுதலும், அரவணைப்பும் எவ்வளவு அவசியம் என்பதையும் அவள் தெரிந்துக் கொள்கிறாள். 😍

இவ்வாறு போன வாரத்தின் ஒரு நாள் நான் புலம்பிக் கொண்டே சமையலறையின் வேலைகளுக்கிடையில் என் கணவரிடம் "எனக்கென்னவோ எல்லாரும் என் மேல புகார் சொல்றத பாக்கும் போதும், கேக்கும் போதும் உண்மையிலையே நான் தான் தப்பான ஆளோ?!! இல்ல என்னையே அப்படி நம்ப வெச்சிடுவாங்களோ?! நான் சொல்றத ஏன் உண்மைனு எல்லாரும் நம்பனும்? அவங்க சொல்ற உண்மைய நான் தான் ஏத்துக்கனுமோ? இப்படியெல்லாம் நம்ப தொடங்கிடுவேன் போல," என்றேன் விரக்தியோடு. 😔

என் மகள் அருகில் வந்து, "அம்மா, 'நீ கரடி என்று யார் சொன்னது?,' ன்ற கதை மாதிரி சொல்ற அம்மா," என்றாள். அதிர்ச்சியானேன்! 

 நீ கரடி என்று யார் சொன்னது? | Buy Tamil & English Books Online | CommonFolks

உண்மைதான்! அந்த கரடியை நம்ப வைத்தது போல் தான் என்னையும் நம்ப வைக்க இச்சமூகம் எதையும் யோசிக்காமல் பல காரியங்களைச் செய்யும். அந்த உண்மையை மறந்து நானும் யோசிக்கிறேன். மற்றவர்கள் சொல்வதால் என் அடையாளம் மாறிவிடாது.😊

அந்த புத்தகத்தை அந்த நேரத்தில் என் மகள் நினைவுப்படுத்தியதுதான் அந்த நாளுக்கான மிகப் பெரிய ஆறுதலும், உந்துதலும்! புத்தகங்களும் கதைகளும் செய்யும் மாயம் தான் எத்தனை! 😘

கேள்வி நல்லா தான் இருக்கு - 4

"அம்மா உன் கையும் நீ போட்ருக்க Dressம் ஒன்னா தெரியுதுமா," என்றாள் வருணிகா.

"அம்மா கலராயிட்டனோ?!" என்றேன்.

"அம்மா, கலர் அப்படின்னா, கலர் கலரா தானா இருக்கணும். Rainbow மாதிரி. ஏன் இப்படி சொல்றாங்க?" என கேட்டாள். 

சற்று யோசித்து நிலைக்கு வருவதற்குள், "அம்மா, அன்னிக்கும் அப்பா கிட்ட இத பத்தி கேட்டேன். நாங்க பேசிட்டு வந்தோம். அப்பா சொன்னாரு வெள்ளையா இருக்கிறவங்கள கலரா இருக்கிறேனு சொல்லுவாங்கனு சொன்னாரு," என்றாள்.

"ஆனா வெள்ளையா இருக்கறத கலர்னு எப்படி சொல்ல முடியம்?" என்றாள் யோசனையுடன்.

நம்ம ஊரில் கலர் என்று வெள்ளைத்தோல் உள்ளவர்களை சொல்வது வழக்கம். இதுவே மேலை நாடுகளின் கருப்பினத்தவர்களை "people of colour" என்று குறிப்பிடுவது வழக்கம். 

 PC: googleColorblindness is not the goal: Anti-racism in the preschool classroom -  The Oak Leaf

எப்படி பார்த்தாலும் அறிவியலின்படி இரண்டுமே தவறு போன்றதாகவேத் தெரிகிறது. மேற்குறிப்பிட்ட ஒரு நிறம் அனைத்து நிறத்தையும் உள்ளடக்கியது, மற்றொன்று அனைத்து நிறங்களையும் வெளியேற்றி நிர்மூலமாக உள்ளது. அறிவியல் ஆசிரியர்கள் இதனை சரியாக விளக்க இயலும். பொது அறிவியல் பார்வையில் இரண்டையுமே "ஒரு நிறம்" என்று குறிப்பிட இயலாது.

சமூகத்தின் அடிப்படையில் வெள்ளைத்தோல் கொண்டவர்கள் உயர்ந்தவர்கள் என்ற நிலை இன்றளவும் உள்ளது. மேலை நாடுகளில் உள்ள இனவெறியினை (Racism) மட்டுமே குறிப்பிடவில்லை. நம் ஊரில் உள்ள பாகுபாட்டினையும் குறிப்பிடுகிறேன். ஒரு கூட்டத்தில் இருக்கும் போது வெள்ளைத்தோல் உடையவர்கள் மேன்மையானவர்கள், அழகானவர்கள், மெத்தப் படித்தவர்கள், அதிக விவரமுள்ளவர்கள், பண வசதி உடையவர்கள், ஆங்கிலம் பேசக்கூடியவர்கள் என்று பல விதமாகக் கற்பனை செய்பவர்கள் உணடு.

நம் குழந்தைகள் இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டவர்கள். வளர்ந்தபின் தான் பெரியவர்களால் இதில் சிக்க வைக்கப்படுகிறார்கள். 

குழந்தைகளுக்கு நிற பாகுபாட்டினை புரிய வைப்பதற்கும், அதில் சிக்காமல் இருப்பதற்கும் புத்தகங்கள்/கதைகள் உண்டு என்பதனை இங்கு பதிவு செய்கிறேன்.

பின் குறிப்பு: என் ஆராய்ச்சிப் படிப்பு காலத்தில் என்னுடைய இரு சக ஆராய்ச்சியாளர்கள் (வெவ்வேறு காலத்தில்) உடன் பயின்றனர். வெள்ளைத்தோல் கொண்டவர்கள். இருவருக்கும் பெண் குழந்தை. 03-05 வயது. என்னிடம் நெருக்கமாக இருப்பர். என்னுடன் அக்குழந்தைகள் நெருக்கமாக இருப்பதைப் பார்த்து (என் நிறத்தினையும் மனதில் கொள்க!) அக்குழந்தைகளின் காப்பாளர் நான் என்று நினைத்துக் கொண்டனர். நினைத்தவர்கள் அனைவரும் முதுநிலை படிப்போ அதற்கு மேலோ படித்துக் கொண்டிருந்தவர்கள்.அந்த இரு தோழிகளுக்கு முன்னரேன் நான் NET & JRF (UGC நடத்தும் போட்டித் தேர்வுகள்) தேர்ச்சிப் பெற்று படித்துக் கொண்டிருந்தேன் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Saturday, July 26, 2025

Is Upside Down a New Perspective? ✌

We visited a friend's house recently. He works in a research institute and travels across the world all the time. 

We happened to see a map on his bedroom door and that attracted attention. It looked different and I could not comprehend it at the first sight. On a closer look, it was a map of Tibet along with neighboring countries but  upside down!!!!

We were surprised and were curious to know the reason behind. He told us that he bought one during his visit to Tibet and perspectives do change when we look at a thing from a new, different angle altogether - politically, socially, economically and by all means.

It was fascinating. He also added that Tamil Nadu would be the northern most state if seen upside down 😀 Give it a thought, you will find interesting ideas yourselves!! 🙌

It definitely is a learning and we would stop complaining if children held their books upside down. Who knows what their perspective is? For children's perspectives are too hard for adults to comprehend. 😎 

கனவில் கல்வி அமைச்சரா! 💝

நான் தொடக்கப் பள்ளியில் படித்த போது அமைச்சர்கள் பற்றியெல்லாம் தெரிந்ததில்லை. அந்த வயதில் கல்விக்கென்று அமைச்சர் உண்டு என்பதெல்லாம் அறியாத தகவல்.

இரண்டு நாட்களுக்கு முன் தூங்கி எழுந்தவுடன் எங்கள் மகள் "அம்மா, என் கனவில் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மாமா வந்தாங்க," என்று தயங்கியப்படியே சொன்னாள். 

"சூப்பர் பாப்பா," என்றோம்.

கேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது. குழந்தைகளின் கனவில் சினிமா பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும் வருவதைப் பற்றியே கேட்டு வந்ததும், அப்படிப்பட்ட வயதையும் அனுபவத்தையுமே கடந்து வந்த எனக்கு இந்தக் கனவு பெரும் மகிழ்ச்சியை அளித்தது. 


கனவில் என்ன வந்தது என்று கேட்டோம். மகள் சொன்னாள். அதை இங்கு பதிவு செய்ய விரும்பவில்லை. ஏனெனில் கண்ட கனவு எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதனை கடிதமாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு எழுதச் சொல்லி இருக்கோம். அதனை அனுப்பியப் பிறகு இங்கு பதிவு செய்கிறேன்.

இம்மாதிரியான சம்பவங்கள் அரசு பள்ளியில் நடப்பதற்கான சாத்தியமே அதிகம். 💟 தங்களின் கல்விக்கான முடிவுகள் யார் கையில் உள்ளது என்பதை இத்தலைமுறை அறிந்து வைத்திருப்பது நல்மாற்றங்களுக்கான பாதை என்பதில் சந்தேகமில்லை. 💪

இயற்கைக்கு உயிர் இருக்கா?

(1) 

சில மாதங்களுக்கு முன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கையில், உயிருள்ளவை உயிர் அற்றவை குறித்தான பேச்சு எழுந்தது. 

"என்னது, காந்தி செத்துட்டாரா?" என்பது போன்ற அதிர்ச்சியில் நானும் என் கணவரும் "என்னது சூரியன், சந்திரன், நீர், காற்று, இவைகளெல்லாம் உயரற்றவைகளா?????" என்று மூன்றாம் வகுப்பு பாடப்புத்தகத்துடன் வியப்புடன் உரையாடத் தொடங்கினோம்.  

ஏன் இயற்கை உயரற்றவைகளாக கற்றுத்தரப்பட வேண்டும்? நாம் உயிர் வாழத் தேவையான இயற்கையை உயிர் உள்ளதாக ஏன் நாம் உணருவதில்லை? கற்பதில்லை? சிறு குழந்தைகளாக இருக்கும் போது நாம் அனைவருமே இயற்கையும் நம் கூட்டாளி என்பது போன்ற உறவுடனே இருந்தோமே! எந்த வயதில் மாற்றுக்கருத்து உள் வந்தது? பள்ளிக்கூடம் தான் நமக்கு மாற்றிக் கற்றுக்கொடுக்கிறதோ? இல்லையெனில், நாம் தான் அனாவசியமாக இயற்கையை உயிர் உள்ளவையாக நினைத்துக் கொள்கிறோமா?  அறிவியல் ஞானமா? எதுவென்று சரியாக தெரியவில்லை.

 (2)

ஒரு முறை குழந்தைகளுக்கான கதைகளில் புனைவு, அதீத புனைவு என்பது பற்றிய கலந்துரையாடலில் நிறைய அனுபவங்களைப் பலருடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் ஒரு குழந்தை மரத்துடன் ஏதோ உரையாடலில் இருந்ததைப் பற்றியும், மரம் காற்றில் அந்நேரம் அசைந்தது மரம் அக்குழந்தைக்குத் தலையை அசைப்பதாகவும் இருந்ததை அக்குழந்தையும், குழந்தையின் தாயும் உரையாடியதைப் பற்றி விவாதம் எழுந்தது (அது நானும் என் மகளும் தான்). உரையாடலில் இருந்த ஒருவர் மரம் நம்முடன் உரையாடுகிறது என்பது போன்றவை குழந்தைகளுக்கு அதீதப் புனைவு என்பதாகும். இல்லாத ஒன்றை குழந்தைகளுக்கு சொல்வது என்பது இயற்கைக்கு எதிரானது என்றும் மிகைப்படுத்துதல் என்றும் விவாதித்தார். எனக்கு அவரின் வாதத்தில் அப்போதும் உடன்பாடு இல்லை. இப்போதும் இல்லை. 

  Alternative Worldviews - Sharing life: The ecopolitics of reciprocity |  Heinrich Böll Stiftung | Regional Office New Delhi 

(3) 

இப்பூமியில் பல திசைகளில் மனிதர்கள் இன்னும் இயற்கையை தன் உற்றத்துணையாகக் கருதி வாழ்கின்றனர். இயற்கை இல்லையேல் நாம் இல்லை. மனிதர்களாகிய நமக்கு இருக்கும் உணர்வுகளைப் போன்றே இயற்கைக்கும் உண்டு என்பது போன்ற நிறைய கருப்பொருட்கள் "SHARING LIFE" என்று மேலே குறிப்பிட்டுள்ள புத்தகத்தில் கையாளப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் என் நண்பனால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட இந்த புத்தகம் என்னை மிகவும் கவர்ந்தது. இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்கள், உலகின் இன்னும் பல இடங்களில் மனிதர்கள் இயற்கையை தங்களின் வாழ்நாள் முழுக்க உடன் பயணிக்கும் ஒரு சக பயணி போலவே கருதுகின்றனர். அவர்களின் வாழ்வியிலே இயற்கையுடன் பிணைக்கப்பட்டு பிரிக்க இயலாததாக இருக்கிறது. இதற்கு உதாரணங்களும் சம்பவங்களும் புத்தகத்தில் உள்ளன. சுவாரஸ்யம்! 

இப்புத்தகமானது இயற்கைக்கு எம்மாதிரியான உணர்வுகள் உண்டு, மனிதன் என்பவன் மற்ற உயிரினங்கள் போன்றும் இயற்கையினைப் போன்றும் ஒரு பகுதி மட்டுமே என்பதை ஒவ்வொரு பக்கத்திலும் நினைவுப்படுத்துவதாக உள்ளது.

நாம் இந்த பரந்த பிரபஞ்சத்தில் மிகச் சிறிய துகள் என்பதை அவ்வப்போது நினைவுப்படுத்திக் கொள்வது நமக்கும் நல்லது நம்மைச் சுற்றியிருக்கும் பிற உயிரினங்களுக்கும் நல்லது. 💚 குழந்தைகளுக்கான கதைகள் காடுகள் பேசுவதும், காற்று இரகசியம் சொல்வதும், மலைகள் உரையாடுவதும் இயற்கை தான். 😍

Wednesday, July 16, 2025

கேள்வி நல்லா தான் இருக்கு - 3

நான்கு வருடத்திற்கு முன் கேட்கப்பட்ட ஒரு கேள்வியினையும், நான்கு நாட்களுக்கு முன் கேட்கப்பட்ட ஒரு கேள்வியினையும் பகிரலாம் என்று தோன்றியது.

 33+ Thousand Asking Question Cartoon Royalty-Free Images, Stock Photos &  Pictures | Shutterstock

முதன்முறையாக பள்ளிக்குச் சென்று வந்த எங்கள் மகளிடம் அன்றைய வீடுப்பாடத்தினை செய்ய சொல்லி, பின்னர் பயின்றதை பார்க்காமல் எழுத வருகிறதா என்று முயற்சி செய்வோமா என்ற முட்டாள்தனமானக் கேள்வியை கேட்டேன்.

என் மகள் அவளின் வீட்டுப்பாடத்தினை முடித்தவுடன், "அம்மா, இப்போ பாக்காம எழுத முயற்சி செய்யவா" என்றாள்.

"சரி," என்றேன்.

உடனே தன் இரு கண்களையும் தன் சிறு கையால் மூடிக் கொண்டு பெரும் குழப்பத்தில், "அம்மா, எதுவுமே தெரியல. என்ன செய்யட்டும்? எப்படி எழுதுறது?", என்றாள்.

நம் பிள்ளைகளின் குழந்தமையை எவ்வளவு சிறிய வயதிலிருந்தே தீர்த்துக்கட்டுகிறோம் என்று மீண்டும் ஒரு முறை வெட்கத்துடன் வியந்தேன். 

 14,300+ Child Question Stock Illustrations, Royalty-Free ...

நான்கு நாட்களுக்கு முன் என்னுடன் பணிபுரிபவரின் மகன் (5 வயது) பள்ளி முடித்து வந்தான். வீட்டுப்பாடம் என்ன உள்ளது என்று அவனின் தாய் பார்த்துவிட்டு, "தம்பி, மூன்று தடவை இந்த பாடத்தை எழுதணும். சரியா?"

உடனே அவன், "அம்மா, நான் ஒரு தடவ எழுதி, அதை அழிச்சிட்டு திரும்ப எழுதி, திரும்ப அழிச்சு திரும்ப எழுதி, மூனு தடவையாக்கனுமா?" என்றான். 

நமக்கு (பெரியவர்களுக்கு) இன்னும் பயிற்சி தேவையோ (குழந்தைகளுகளுடன் எளிதாக உரையாட) மொமன்ட்! 😃

Monday, March 10, 2025

மொட்ட கடுதாசி

 


தபால் பெட்டி எழுதிய கடிதம் - எஸ்.ரா.வின் இந்த புத்தகம் சிறார்காளுக்கான நாவல். பெரியவர்களும் வாசிக்கலாம். நம் பழைய நினைவுகளை கிளறச்செய்வதாக இருக்கும்.

அதையெல்லாம் விட்டுவிடுவோம். 

புத்தகத்தின் ஒரு சிறிய பகுதிக்கு வருவோம்: 

 பகுதி 1

 

 பகுதி 2

 

                பகுதி 3

 

ஒருவன் அல்லது ஒருத்தி தன் அடையாளத்தை மறைத்தோ, மாற்றியோ இவ்வாறான செயல்கள் செய்வது அரசு பணிகளில் வாடிக்கை. நேர்மையானவற்றை ஏன் ஒருவர் அடையாளத்தை மறைத்து செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுவது நியாயம் தானே. இல்லையெனில் சரியானவற்றை கேட்க துணிச்சல் இல்லாத போது அதனை கேட்காமல் இருப்பதே நலம் என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. தகவல் அறியும் உரிமைச் சட்டமும் கிட்டதட்ட "மொட்ட கடுதாசி" அளவுக்கு பயன்படுத்தப்படுவதை அரசு பணியில் இருப்பவர்கள் ஒப்புக்கொள்வர்.

பணியில் அடிக்கடி "மொட்ட கடுதாசி"யினை சந்தித்து சளித்தே விட்டது. இந்த பகுதியை படித்தவுடன் அவ்வாறு கடிதம் போடுபவர்கள் தலையில் தபால் பெட்டியானது ஒவ்வொரு கடிதத்திற்கும் ஒரு குட்டு என வைத்தால், ஊரில் எத்தனை பேர் தலையில் குட்டு நீண்டிருக்கும் என கற்பனை செய்தால் (வடிவேலு அவர்கள் ஒரு கல்லூரி விடுதியில் மாணவர்களிடம் குட்டு வாங்கும் காட்சியினை நினைவு படுத்திக்கொள்ளவும்) குதூகலமாக உள்ளது (என் கண் முன் சில முகங்கள் வந்து செல்கின்றன).

வரலாற்றில் ஒரு ரகசியத்தை சுமந்து செல்ல ஒருத்தருக்கு மொட்டை அடித்து அதில் செய்தியினை எழுதி அனுப்பியது தான் முதல் "மொட்ட கடுதாசி" என்று திரு. இறையன்பு அவர்கள் ஒரு காணொலியில் சொல்லியிருந்தார். நம்மிடையே பேச்சு வழக்கில் "மொட்ட கடுதாசி"யானது மிக பிரபலம். யாரையேனும் மிரட்டுவதற்கோ, எச்சரிப்பதற்கோ, காழ்ப்புணர்ச்சியை தீர்த்துக்கொள்ளவோ, ஒருவரின் பணியை கெடுக்கவோ, இன்னும் ஏகப்பட்ட பொய் காரணங்களுக்காக இன்று "மொட்ட கடுதாசி"யானது உலாவுகிறது. இவ்வாறு நேரத்தை விரயம் செய்பவர்களுக்கு தபால் பெட்டி உயிர்ப்பித்து வந்து நகைச்சுவையான தண்டனைகளை வழங்கினால் நன்றாகத்தான் இருக்கும்! 

ம்ம்ம்ம் (பாதிக்கப்பட்டவளின் மனக்குமுறல் 😃)

Wednesday, February 26, 2025

பழைய புத்தகக் கடைகள் - சற்றே மாறிய பார்வை

கல்லூரி காலங்களில் விலைக்கூடிய புத்தகங்களை வாங்க முடியாத நேரத்திலும், ஒரு சில பகுதிகள் மட்டுமே ஒரு புத்தகத்தில் தேவைப்படும் வேளையிலும் மட்டும் பழைய புத்தகக் கடைகளை நோக்கி போனதுண்டு. மற்றபடி விரும்பி வாசிக்கக்கூடிய புத்தகங்களுக்காக அவ்வாறு போனதில்லை. பொதுவாக வேறொருவர் பயன்படுத்தி தனக்கு தேவையில்லை என்றோ, பழையதாகியது என்றோ தூக்கி எறியப்பட்ட புத்தகங்களை நாம் ஏன் வாங்க வேண்டும் என்ற எண்ணம். அதில் நிறைய கிறுக்கல்கள் இருக்கும், கோடிட்டிருக்கும், கிழிந்திருக்கும் என்பது போன்ற பார்வையே எனக்கு மேலோங்கியிருக்கும். பாடப்புத்தகங்கள் விலை அதிகமாக இருந்ததால் வேறு வழியில்லை. மற்றபடி நம்மால் முடிந்த அளவு புத்தகங்கள் புதிதாக வாங்கியே படிப்போம் என்ற எண்ணம்.

 வீடில்லாப் புத்தகங்கள் / Veedilla Puthagangal - Centaram Books

சமீபத்தில் படித்த "வீடில்லாப் புத்தகங்கள்" (எஸ்.ரா) வேறு பார்வையை கொடுத்துள்ளது. நல்ல நிலையில் உள்ள புத்தகங்களும் கிடைக்கும், அரிய புத்தகங்கள், நமக்காக காத்துக் கொண்டிருக்கும் புத்தகங்கள், நம் பார்வையை மாற்ற எதேச்சையாக கிடைக்கக்கூடிய புத்தகங்கள், இப்படி ஏராளமானவை, அதுவும் குறைந்த விலையில். வேறொருவர் வேண்டாம் என வெளியேற்றியதை நமக்கு தேவைப்பட்டால் வரவேற்பதில் என்ன தவறு!! ஒரு வகையான ஈகோவும் இவ்வளவு நாள் ஒட்டிக்கொண்டிருந்ததை உணர முடிந்தது.

"வீடில்லாப் புத்தகங்கள்" - சாலையோர புத்தகங்களை விர்ஜீனியா வுல்ஃப் இப்படிதான் அழைத்துள்ளார். உண்மை தான். இன்னும் இருப்பிடமேதும் கிடைக்காமல் சாலையிலேயே வசித்து வருகிறது தன்னை ஏந்தும் கைகளுக்காக காத்துக்கொண்டு. இப்புத்தகத்தில் எஸ்.ரா சாலையோர அல்லது பழைய புத்தக்கடைகள்/வண்டிகளுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், நடந்த சம்பவங்கள், கிடைத்த புத்தகங்கள் என பலவற்றை அழகாக விவரித்துள்ளார். அக்கடைக்காரர்களுடன் ஏற்படும் வித்தியாசமான நட்பும் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. பழைய புத்தகங்களில் யாரோ ஒருவரால் எழுதப்பட்ட குறிப்புகளை யார் யாருக்காக எழுதியிருப்பார்கள் என்ற எஸ்.ராவின் எண்ண ஓட்டங்கள் இருப்பது படைப்பாளிகளுக்கே உண்டான கற்பனை வளம்.

எனக்கு அப்படியெல்லாம் தோன்றுமா என்று தெரியவில்லை. ஆனால் பழைய புத்தகங்கள்/கடைகள் அவசியம் பார்க்க வேண்டியவை என்று நம்புகிறேன். அதன் விளைவாக தற்போது எங்கள் நூலகத்திற்கும், வீட்டிற்கும் சில பழைய புத்தகங்கள் வாங்கியுள்ளேன். அவற்றுள் சில புத்தகங்கள் நிச்சயம் என்னால் புதியதாக வாங்க இயலாது (விலையினால்). இதில் எனக்கு கிடைத்த இன்னொரு படிப்பினை நாம் பயன்படுத்தும் புத்தகத்தினை முடிந்தவரை நல்ல நிலையில் வைத்துக்கொள்வது பின்னர் ஒரு நாள் வேறு ஒருவருக்கு போய்சேர உதவியாக இருக்கும் என்பது தான்.

Monday, February 17, 2025

அரசுப் பள்ளி - அனுபவக் குறிப்புகள்: 3

கண்டிப்பாக Pre KG, LKG, UKG போன்ற பெரிய படிப்புகள் எங்கள் மகளுக்கு தேவையில்லை என்று முடிவு செய்திருந்ததால் அரசு அங்கன்வாடிக்கு ஆறு வயது வரை சென்று வந்தாள். அவள் இஷ்டத்திற்கு ஏற்ப விடுப்பு எடுத்துக் கொள்வது என்று மகிழ்ச்சியாகவே இருந்தது. ஆறு வயது நெருக்கத்தில் அவளுக்கு அங்கு சொல்லிக்கொடுப்பது எல்லாம் சலித்துப்போகவே விடுப்புகள் நிறைய எடுக்க ஆரம்பித்தாள்.

அவளின் அங்கன்வாடியில் தான் அவள் தனியாக உண்ண கற்றுக்கொண்டது. சக குழந்தைகளுடன் நெருக்கமாக பழகியது. அங்கு தன்னுடன் இருந்த நிறைய பேர் இன்று பள்ளியிலும் உடன் இருப்பது மகிழ்ச்சி. அவளின் அங்கன்வாடி ஆசிரியரும் சரி, சமைக்கும் அத்தையும் சரி அவள் அங்கு இருந்த காலத்தில் மிக அருமையாக பார்த்துக் கொண்டனர் என்றால் மிகையாகாது. அவளை அங்கன்வாடியில் சேர்த்தது மிகச்சரி என்று சொல்வதற்கு நிறைய தருணங்கள் கிடைத்தது.

எனினும் ஒரு நிகழ்வு.

அங்கன்வாடிக்கு என்று ஒரு சீருடை உண்டு. இப்போது மாற்றி விட்டார்கள், நிறம் மற்றும் அமைப்பினை. அப்போது நீல நிறத்தில். ஆண் குழந்தைகளுக்கு சட்டை மற்றும் அரைகால் சட்டை. ஆனால் பெண் பிள்ளைகளுக்கு பாவாடையாகவும் இல்லாமல், சட்டையாகவும் இல்லாமல் தரையில் உட்கார வசதியில்லாமலும், விளையாட ஏற்றதாகவும் இல்லாமல் இருக்கும். இரண்டு சீருடைகள் தருவர். அத்துணி வேறு எங்கும் கிடைக்காது. கூடுதலாக வாங்க இயலாது. அதனால் சில நாட்கள் குழந்தைகள் வேறு உடைகளை அணிவது வழக்கம். அவ்வாறு ஒரு நாள் பள்ளியில் வருணிகாவின் சீருடை ஈரமானதால் தன் பையில் இருந்த தன் அரைகால் சட்டை போன்ற ஆடையை மாற்றிக்கொண்டாள். அவளின் அங்கன்வாடி ஆசிரியர் இது போன்ற ஆடையை பள்ளிக்கு போட்டுவரக் கூடாது என அவளிடமே தெரிவித்தார். அதனை அவள் என்னிடத்தில் கூறும் போது என்ன சொல்வதென்றே தெரியாமல் இருந்தது! 

வீட்டில் மட்டுமே உடுத்தக்கூடிய ஆடைகளை பள்ளிக்கு அணிவிக்கக்கூடாது என்ற குறைந்தபட்ச அறிவினைக் கொண்ட நாங்கள், நிச்சயம் அது போன்ற உடையினை கொடுத்து அனுப்பியிருக்க மாட்டோம் என்பது குறிப்பிடத்தக்கது.

 பெண் எழுத்து: ஆடை அரசியல் | Female Writing: The Politics of Dress -  hindutamil.in

ஐந்து வயது மகள் அணிந்த ஆடை அவளின் முட்டி வரை மட்டுமே இருந்தது என்பதும்  இறுக்கமானது என்பதும் தான் அவர்களின் பிரச்சனை. ஐந்து முதல் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டுமே உள்ள இடத்திலும் இது என்ன மாதிரியான ஆடை கட்டுப்பாடு என்று இன்றளவும் எனக்கு விளங்கவில்லை. அந்த நிகழ்வினை நினைக்கையில் எரிச்சல் என்ற உணர்வு தான் மேலோங்குகிறது.

அரசுப் பள்ளி - அனுபவக் குறிப்புகள்: 2

அங்கன்வாடியில் துவங்கி தற்போது பயின்று வரும் மூன்றாம் வகுப்பு வரை பள்ளிக்குச் செல்வதில் வருணிகாவிற்கு எந்த தொந்தரவும் இருந்ததில்லை. ஏனோ இரு வாரங்களுக்கு முன்னர் திடீரென்று பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லை என சொல்லி ஒரே அழுகை. சரியென்று அவள் போக்கில் ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாள் என பள்ளிக்கு விடுமுறை எடுத்தாயிற்று. பிரச்சனை என்னவென்று குழந்தைக்கு சரியாக சொல்லத் தெரியவில்லை. ஒரு வழியாக சில, பல காரணங்களை ஊகித்து/கண்டுபிடித்து, அதனை சரி செய்வதென்று மூவரும் ஒரு மனதாக முடிவு செய்தாயிற்று.

அவள் பள்ளிக்குப் போகாத மூன்றாவது நாள் பள்ளியின் தலைமையாசிரியர் உட்பட மூன்று ஆசிரியர்களிடமிருந்து தொலைப்பேசி அழைப்புகள். 

"அவளை அனுப்பி வைங்க. நாங்க பாத்துக்கறோம்."

"சரிங்க மேடம்/சார்."

"பாப்பா, பாத்தியா. ஸ்கூலயிருந்து உன்ன கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. உன்ன அவங்களுக்கு தேடுதாம்," என்று அம்மா சொல்ல, அரை மனதுடன் அவள் பள்ளிக்குச் சென்றாள்.

மறுநாள் பள்ளியில்:

"சார், கொஞ்சம் பாத்துக்கங்க," என்று நான் சொன்னது தான் தாமதம். அவளின் ஆசிரியர் அவளை விட ஒரு குழந்தையாக மாறி,

"மேடம், எனக்கு மூனு நாளா வேலையே ஓடல. இவ இப்படி இருக்கற பொன்னு இல்லையே, ஏன் இப்படி ஆனா, அவளுக்கு என்ன ஆச்சுனு யோசிச்சிட்டே இருக்கேன் மேடம். என்னால என் வேலைல கவனம் செலுத்தவே முடியல. எங்க கிட்ட அவளுக்கு ஏதும் பிரச்சனனு சொன்னா சரி செஞ்சிடலாம் மேடம்," என்று அவர் சொல்லும் போதே அவர் கண்ணில் அக்கறையும், கவலையும், கொஞ்சம் கண்ணீரையும் உணர முடிந்தது.

இப்படி ஒரு ஆசிரியர் என் மகளுக்கு தனியார் பள்ளியில் கிடைத்திருப்பாரா என்பது சந்தேகமே!! 

Best Tamil Quotes on Teacher | BeInspired.in

பி.கு: அந்த ஒரு வாரம் அழுகையுடன், சோகமாக பள்ளிக்கு சென்றவளை பார்ப்பதற்கு அழுகையாக வந்தது. ஒரு குழந்தை மகிழ்ச்சியாக சென்று வர ஒரு பள்ளி இல்லையோ என்ற கோபமும், விரக்தியும், இயலாமையும் அழுகையாகவே வெளிவந்தது.

Friday, February 7, 2025

அரசுப் பள்ளி - அனுபவக் குறிப்புகள் - 1

எனது மகள் பயிலும் அரசுப் பள்ளியில் ஏராளமான அனுபவங்கள் கிடைக்கின்றன. அவற்றை பதிவு செய்வது, புதிய அல்லது பழைய உரையாடல்களுக்கு பயன்படலாம் என்பதால் எழுத முடிவு செய்துள்ளேன்.

2024ம் ஆண்டு குழந்தைகள் தினத்தை ஒட்டி மூன்றாம் வகுப்பு பயிலும் வருணிகா தன் பள்ளியில் பயிலும் அனைத்து நண்பர்களுக்கும் (மொத்த மாணவியர் எண்ணிக்கை 30) வாழ்த்து தெரிவிக்க விரும்பி, வீட்டில் இருந்த வெள்ளை தாள்களை எடுத்து, அவற்றை கிழித்து ஒரு சிறிய விடிவ புத்தகம் போன்று நான்கு பக்கங்களில் செய்தாள். அதில் ஒரு பக்கத்தில் நண்பரின் பெயர், இரண்டாவது பக்கத்தில் குழந்தைகள் தின வாழ்த்து, மூன்றாவது பக்கத்தில் ஒரு படம் வரைந்து, நான்காவது பக்கத்தில் இவளின் பெயர் என்று ஒரு திட்டம் தீட்டி வேலையை தொடங்கினாள்.

Tamil nadu india government school hi-res stock photography and images -  Alamy

ஏறக்குறைய 30 நபர்களுக்கு செய்ய வேண்டும். ஆரம்பத்தில் சுலபமாக செய்து விடலாம் என்று எண்ணியிருந்தாள். ஆனால் முடியவில்லை. நாட்கள் மிகக் குறைவாக இருந்த போது தான் ஆரம்பித்து இருந்ததால், சிரமமாக உணர்ந்தாள். ஆனாலும் பாதியில் நிறுத்த மனசில்லை. இம்மாதிரி நேரத்தில் பெற்றோர்கள் தலையில் இவ்வேளைகள் விழுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. வருணிகாவின் பெற்றோர்களும் இந்த முக்கியமான பணியில் ஈடுபட்டனர். வேலையும் சூடுபிடித்து இரண்டே நாட்களில் முடிந்தது. எனினும் இன்னும் வண்ணமயமாக இந்த பரிசு இருக்கலாமே என்று அவளுக்குத் தோன்ற, மீண்டும் மூவரும் களத்தில். ஒவ்வொருவருக்கும் ஏதேனும் மூன்று வண்ணங்களைக் கொண்டு ஒவ்வொரு பக்கத்தின் ஓரங்களையும் (borders) வண்ணமயமாக்கினார்கள்.  உண்மையில் இவ்வண்ணம் தீட்டியபின் அப்பரிசு கூடுதல் அழகாகியது.

குழந்தைகள் தின விழா முடிந்த பின் வருணிகா அவளின் நண்பர்கள் அனைவருக்கும் இப்பரிசினை வழங்கினாள். ஆசிரியர் இவ்வாறு நீங்களாக செய்து வழங்கும் பரிசே விலையுயர்ந்தது என பாராட்டி அனைவரும் இவ்வாறு செய்ய ஊக்கப்படுத்தியது இவளுக்கு கூடுதல் மகிழ்ச்சி.

குழந்தைகள் சந்தோஷமாக பெற்றுக் கொண்டனரா என பெற்றோர்கள் கேட்டனர். ஆம் என்றாள். மூவருக்கும் மகிழ்ச்சி.

மறு நாள் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவள் சொன்ன முதல் விஷயம்,

 "அம்மா, சீனு நான் குடுத்த பரிச திருப்பிக் கொடுத்துட்டான்."

"ஏன்?" 

"நான் அவனுக்கு கொடுத்த பேப்பரில் கலர் அடிச்சிருந்தேன் ல?"

"ஆமாம்."

"அது அவனுக்கு பிடிக்கலையாம்."

"ஏன்னு கேட்டியா?"

"ம்ம்ம்ம்.."

"என்ன சொன்னான்?"

"அதுல இருந்த கலர் அவங்க கலர் இல்லையாம். அவங்களுக்கு வேற கலராம். அப்படினு சொல்லி திருப்பி கொடுத்துட்டான்."

அம்மாவுக்கு அதிர்ச்சி. சீனு நான்காம் வகுப்பு. அப்பா இறந்து ஒரு வருடம் தான் ஆகிறது. நல்ல சேட்டைக்காரன். படிப்பிலையும் ஓரளவுக்கு கெட்டி தான்.

"அம்மா, அது என்ன அவன் கலர் இல்லைனு சொல்றான்?"

"அந்த கலர் எல்லாம் அவனுக்கு பிடிக்கல போல. நாம அவன் கிட்ட கேப்போம் ."

கயிறு தான் பிரச்சனைனு நினைச்சா, நிறம்கூட பிரச்சனை தான் போல.  

The World Has Millions of Colors. Why Do We Only Name a Few? | Smithsonian

யாருடைய துகள் நாம்?

"சீதக்காதி" திரைப்படத்தில் வருவது போன்று "கலைக்கும் கலைஞனுக்கும் மரணமில்லை" தான். அதே போன்று நம் முன்னோர்களுக்கும் மரணமி...