என் மகள் பயிலும் அரசு பள்ளியில் வளாகத் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்ட போது அங்கு இருந்த ஒரு மரத்தின் ஒரு பகுதியை வெட்ட முடிவு செய்யப்படுவதாக ஆசிரியர்களும் தூய்மைப் பணியாளர்களும் பேசிக் கொள்வதை மாணவர்கள் கேட்டுள்ளனர்.
இவர்களுக்கோ அவ்வாறு வெட்டுவதில் விருப்பமில்லை. ஆசிரியர்களிடம் சொல்லியுள்ளனர். ஆசிரியரோ அதனை வெட்டுவதன் அவசியத்தை எடுத்துக் கூறியுள்ளார். மாணவர்களால் மேற்கொண்டு என்ன பேசுவது, என்ன செய்வது என்று தெரியாமல் விட்டுவிட்டனர். மீண்டும் சற்று நேரம் கழித்து அதே சிந்தனையில் இருந்துள்ளனர்.
"நாம் ஏன் 'மாணவர் மனசு' பெட்டியில் எழுதிப் போடக்கூடாது?" என்று யோசித்துள்ளனர். அனைவரும் ஒப்புக்கொள்ள மாணவர்கள் ஒரு கடிதத்தினை எழுதி அதனை 'மாணவர் மனசு' பெட்டியில் போட்டுள்ளனர்.
No comments:
Post a Comment