Monday, March 9, 2026

குட்டி ஆகாயத்தின் புதிய கதை - ஜெனியின் பரிசு

குழந்தைகளின் பிரார்த்தனைகள் என்னவாக இருக்கும்?

என்னவாக இருந்தாலும் பெரியவர்களின் அறிவுக்கு எட்டாததாகத்தான் இருக்கும்!!

"ஜெனியின் பரிசு" என்ற கதையினை படித்த போது அடுத்து இதுவாக இருக்குமோ என்று நான் நினைத்த எதுவுமாக அக்கதை இல்லை. ஜெனியின் எண்ணமும் ஆசையும் பிரார்த்தனையும் வேறாக இருந்தது. அது அழகாகவும் இருந்தது!

"அபியும் நானும்" என்ற திரைப்படத்தில் ஒரு காட்சி உண்டு. வீட்டில் உள்ள அனைவரும் அவ்வீட்டின் உரிமையாளரின் திருமண நாளினைக் கொண்டாட ஐந்து நட்சத்திர உணவகத்திற்கு செல்வர். கிளம்பும் வேளையில் அந்த வீட்டின் குழந்தை அவர்கள் வீட்டில் வேலை செய்பவரையும் (வீட்டில் ஒருவராகவே வாழ்ந்து வரும் நபர்) அழைத்து செல்லலாமா என்று கேட்பாள். சரி என்று அழைத்துச் செல்வர். அங்கு பெரியவர்கள் அவர்களுக்குள்ளே பேசிக் கொள்வர்:

"இவரை அழைத்துச் செல்ல வேண்டும் என்று ஏன் நமக்கு தோணல?"

"அதெல்லாம் குழந்தைகளுக்குத் தான் தோணும். நாம தான் வளந்துட்டோமே!"


"ஜெனியின் பரிசு"ம் அப்படித்தான். அடுத்தவர்களைப் பற்றியும் அவர்களின் தேவைகளைப் பற்றியும் நினைக்கும் குழந்தைகளின் மனது விசாலமானது. அவர்களின் உலகில் ஏகப்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் உண்டு. இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொருவரும் மற்ற யாருக்கோ கிறிஸ்துமஸ் தாத்தாவாகவும் இருக்க முடியும் என்று குழந்தைகள் நமக்கு காண்பிக்கின்றனர்.  அதை இன்று நாம் சுருக்காமல் இருந்தாலே போதுமானது. எதிர்காலத்தில் போர்கள் கூட குறையக்கூடும். 

சிறார் சொன்ன கதை வரிசையில் குட்டி ஆகாயத்தின் புதிய வெளியீடு - ஜெனியின் பரிசு.

குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும்! 💗

Wednesday, February 25, 2026

Priya, Happy Annachi! :-)

My husband often tells me not to mingle with adults, as it does not do any good to me. Instead, it brings all nonsense into my life. So, he always encourages me to stay active with kids around as this fits me. I prefer kids to adults, of course. Not because they are easy to manipulate unlike adults, but because we get along well.

One recent incident that endorses this view of mine is "Zi," a tiny little boy sharing his sadness that Tirunelveli did not have an airport. He feels that an airport in this city would make it easier for both of us to reach the other one easier. He also shared that it would be great to have a magic machine that in no time transports us (Zi & I) to each other's place whenever we wanted.  

                                     
google images

Fantasy is a beautiful part of life. It is meant not only for children but also to those of us who love living with beautiful souls. I do know better than that 6-year-old kid that this whole idea of magic machine was an imaginary one and would not happen, nevertheless it was so lovely to expand this idea with him to many levels. That made my whole week. I could not stop smiling thinking of this conversation, no matter what I do.

Love you Zi :-) 

P.S.: Hop along only if you are either a child or is there a beautiful child inside you. Otherwise, please spare me, ;-) as I do not have time and energy for you! :-)

Love You Mahe

It's been two years now, ammu. I did not write to you since March 2024. But you are there in my thoughts every day! Every time I talk to aunty or text Murugan or meet Amala papa, you are there everywhere. 

Since I had not written to you so long, I realized I did not write to anyone for that matter. It has always been between us to exchange 'N' number of letters. Whenever I visit Chennai, the railway stations remind me of you. Whenever I recall those days, I wish I had spent some more time with you. I wish I we had travelled even more on those trains. Those platforms look empty without you. Oh god, can we go back to those days!

You were a great listener. Today was one among many days when I felt that you were missed to share about what I went through. You were never judgmental. I was blessed to have you around. Yet I regret not understanding it completely.  

Whenever I visit aunty and uncle, I am reminded of you persuading me to stay in your house. You in fact told me once that your home had a fish tank assuming that I would like it and stay overnight. Unfortunately, I never got a chance to spend night in your room. Today, that living room of yours has a large portrait which I cannot take my eyes off from or sometimes do not want to look at. I never thought such a day would come in our lives. I miss you terribly Mahe. I really hope you are safe somewhere out there, watching all this and listening to all that we speak about you in your absence. 

Had we known this fate before, we would have hugged more, kissed more and wrote each other more. Though we all moved on with our lives from the day you left us, do know that this akka, like many out here, misses you! 

I still remember the way you told me to buy chocolates for Laali (I did. Had you not told me, I would not have done so) and I also remember that I had shared several times with you that I did not hug her during our first meet. Life did not give me a chance to do it again. How unlucky I am!

Love you Mahe!



புத்தகக் கண்காட்சி - மாற்றம் தேவை

நெல்லையில் 9வது புத்தகத் திருவிழா நிறைவடைந்தது. சென்னை புத்தகத் திருவிழாவை ஒப்பிடும் போதோ, இன்னும் ஒரு சில பெரிய நகரங்களை ஒப்பிடும் போதோ இது மிக மிகச் சிறியது. எனினும் மாவட்டந்தோறும் தமிழக அரசு நடத்துவது மிகவும் பாராட்டுக்குரியது. இது போன்ற மாவட்ட புத்தகத் திருவிழாக்கள் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என்பது சிறப்பு.

                                              google images
எனினும் இந்த ஆண்டு நெல்லை புத்தகக் கண்காட்சியில் கண்ட ஒரு பெரும் குறை பலரால் விவாதிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். 

புத்தகக் கடைகள் குறைவு தான். அதிலும் குழந்தைகளுக்கென பிரத்யேகமான புத்தகக் கடைகள் வெகு குறைவு. அதிலும் தமிழில் ஒன்றிரண்டு மட்டுமே. ஆங்கிலத்தில் ஐந்தாறு இருந்தன. பெற்றோருடன் குழந்தைகள் வருகின்றனர். அது தவிர பள்ளிகள் குழந்தைகளைக் கூட்டமாக அழைத்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் பள்ளிகள், கல்லூரிகள் குழந்தைகளை அழைத்து வருவதை உறுதி செய்கின்றனர். 

பள்ளிகளை பொருத்தவரை அரசு பள்ளி குழந்தைகள் குறைவாகவும், தனியார் பள்ளி அதிகமாகவும் அழைத்து வருவதை பார்க்க முடிகிறது. ஏனெனில் அரசு பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகளைப் போன்று போக்குவரத்து வசதி இல்லை. அதிலும் சிறிய குழந்தைகளை பொது பேருந்தில் அழைத்து வருவது சிக்கல் தான். இவ்வாறு பல இடையூறுகளுக்கிடையில் தான் குழந்தைகள் புத்தகத் திருவிழாவிற்கு அழைத்து வரப்படுகின்றனர். பிள்ளைகளை புத்தகங்கள் கொட்டிக்கிடக்கும் இடத்திற்கு அழைத்து வருவதே சவால் நிறைந்து.

இவ்வாறு இருக்கையில் புத்தகத் திருவிழாவின் ஒரு சில (பல) கடைகளில் அரசு பள்ளி சீருடையில் இருக்கும் மாணவர்கள் புத்தகங்களை தொட்டுப்பார்க்கக் கூட கடை பொறுப்பாளர்கள் அனுமதிப்பதில்லை என்பது வேதனைக்குரியது!!!! குழந்தைகள் தனியாக கடைகளுக்குள் சுற்றிப்பார்த்தால் எந்தத் தடையும் இல்லை. புத்தகங்களை தொட்டு, எடுத்துப் பார்க்கும் போது, "எடுக்காதே, தொடாதே, கலைக்காதே" என்று நேரடியாக சொல்லப்படுகிறது. ஆங்கில புத்தகக் கடைகளில் இவ்வாறு நடப்பது அதிகம். தமிழ் புத்தகக் கடைகளில் குறைவு. பெற்றோருடன் வரும் குழந்தைகளிடம் இவ்வாறு நடப்பது அரிது. மேலும் வயதில் மூத்த பள்ளி மாணவர்களிடமும் இவ்வாறு பெரும்பாலும் சொல்லப்படுவதில்லை. சிறிய குழந்தைகளிடமே இவ்வாறு நடந்து கொள்கின்றனர். தனக்காக குரல் கொடுக்க முடியாத குழந்தைகளிடம் நம் அதிகாரத்தைக் காட்டியே பழக்கப்பட்ட சமூகம் தானே நாம்!

பல நேரங்களில் எந்த குழந்தை புத்தகம் வாங்க காசு வைத்திருக்கும் என்ற முன்முடிவோடு அங்கு பலர் அமர்ந்திருக்கின்றனர். புத்தகம் வாங்கினாலும், வாங்காவிட்டாலும் பார்க்கும் உரிமை குழந்தைகளுக்கு இல்லையா!? இல்லையெனில் "குழந்தைகளுக்கு அனுமதி இல்லை" என்று எழுதி ஒட்டிவிடலாமே! இப்போக்கினை நான் சென்னையில் கண்டதாக நினைவில்லை. சிறிய ஊர்களில் இது அதிகம் என்று நினைக்கிறேன். வேறு சிலரும் பள்ளி மாணவர்களுக்கு, அதிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, இவ்வாறு நடப்பதை அவர்களும் கண்டதாகத் தெரிவித்தனர்.

பல முயற்சிகளுக்குப் பிறகு பள்ளிக் குழந்தைகள் புத்தகத் திருவிழாக்குள் வருகின்றனர். புத்தகங்களை தொட்டு, எடுத்து பார்க்கக் கூட அனுமதிக்காவிட்டால், அவர்களை எவ்வாறு வாசிப்புக்குள் கொண்டு வரப்போகிறோம்? இவ்வாறு தடுக்கப்பட்டால், அவமதிக்கப்பட்டால் புத்தகங்களிடமிருந்து குழந்தைகளை இன்னும் தூரமாக்குகிறோம் என்பதில் சந்தேகமேயில்லை.

மொழிகளால் தொலைந்தவர்கள் - 2

கிரியின் கதையை படிக்கும் போது சில நினைவுகள். பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நாங்கள் சென்னைக்கு "மிக அருகில்" குடியேறிய போது, அடுத்த நிலத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட இருந்தது. அப்போது வேறு மாநிலத்தைச் சேர்ந்த குடும்பம் அங்கு வந்து சேர்ந்தனர். அப்பா, அம்மா, பெரியவள் ஆறு வயது இருப்பாள், சின்னவள் இரண்டு வயது இருக்கும். அந்த சிறிய குட்டி அனைவரையும் ஈர்க்கக்கூடியவள். அவளை கொஞ்சுவது வழக்கம். அவ்வாறே பெரியவளும் பழக்கமானாள். இருவருக்கும் மற்றவரின் மொழி கொஞ்சமும் தெரியாது. எனினும் பேசிக்கொள்வோம். சைகை செய்து கொள்வோம். அவர்களின் தாயுடனும் அவ்வாறே. 

சில நாட்களில் கழித்து தொடர்ச்சியாக இரண்டு, மூன்று நாட்களாக பெரியவளைக் காணோம். அவளின் அம்மாவிடம் கேட்ட போது சென்ற வார இறுதியில் அவர்களில் சொந்த ஊருக்கு அருகில் உள்ள விடுதி வசதியுடன் கூடிய பள்ளியில் சேர்த்து விட்டதாகவும், பார்ப்பதென்றால் மாதமொரு முறை மட்டுமே எனவும் கூறினார். எங்களுக்கு அதிர்ச்சி. முதலாம் வகுப்பு படிக்கும் வயது மட்டுமே. எனினும் விடுதியில் சேர்க்கப்பட்டது கவலையளித்தது. அவளின் பெற்றோருக்கும் கவலை தான். ஆனால் அவர்களுக்கு வேறு வழியில்லை. இங்கு மொழி பிரச்சனை, ஒரே இடத்தில் வேலை இருக்காது. மாறிக் கொண்டே இருக்க வேண்டும். குழந்தைக்கு கல்வி அவசியம் என்று உணர்ந்தவர்கள், பிரிவே மேல் என்று முடிவு செய்து குழந்தையை பிரிந்து வாழத் தொடங்கினர். அவள் தங்கிய விடுதியின் தொலைபேசி எண்ணில் வாரம் ஒரு முறை பேசுவோம். ஆம்! நானும் தான் பேசுவேன் - மொழி பிரச்சனையைத் தாண்டி தான்! 

சில மாத காலத்திற்குப் பிறகு அடுத்த பணியிடத்திற்கு அவர்கள் செல்ல வேண்டிய நேரம் வந்தது. அந்த குழந்தையையும், தாயையும் பிரிவது கண்ணீர் வரவழைத்தது. எனது தோழி அழகான ஒரு குழு புகைப்படத்தை எடுத்து ஆளுக்கொரு நகலினை கொடுத்தாள். அப்புகைப்படம் எங்குள்ளது என்று தேடிப்பார்க்க வேண்டும். இனி இரண்டு மூன்று ஆண்டுகளில் இந்த குழந்தையும் ஏதோவொரு விடுதியில் தங்கி பயிலும் என்று தோன்றியது. அதன் பிறகு சிறிது காலத்தில் அவர்களுடனான தொடர்பு அறுந்துவிட்டது. 

இன்று யோசிக்கையில் அக்குழந்தைகளின் பெயர் கூட நினைவில் இல்லை. எங்கோ நல்ல நிலையில் இருப்பார்கள் என்று நினைத்துக் கொள்கிறேன். நாம் சர்வ சாதாரணமாக "வடக்கன்ஸ்" என்றும் இன்னும் பிற வசை பாடும் சொற்களாலும், ஏளனம் செய்யும் சொற்களாலும் நம் மாநிலத்தில் வேலை செய்ய வருபவரை அடையாளம் காண்கிறோம். அவர்களின் சொந்த ஊரை விட்டு, உறவுகளை விட்டு, ஏதோ ஒரு வேலை செய்து தன் குடும்பத்தைக் காக்க போராடிகிறார்கள். அதிலும் இது போன்ற போராட்டத்தில் அக்குடும்பங்களின் குழந்தைகள் அனுபவிப்பது தனி போராட்டம் தான்.

Thursday, February 19, 2026

மொழிகளால் தொலைந்தவர்கள் - 1

"மொழிகளால் தொலைந்தவன்" - இப்புத்தகம் கிரி என்ற சிறுவனின் கதை. வட இந்தியாவில் பிறந்து, சிறுவனாக இருந்த போது, அவனின் பெற்றோர்கள் சொந்த கிராமத்தில் விவசாயம் செய்ய இயலாததால் தொடர்ந்து இந்தியாவின் பல மாநிலங்களில் தங்கி கட்டட வேலை செய்ய இடம்பெயரும் குடும்பத்தைச் சேர்ந்தவன். அவர்கள் செல்லும் ஒவ்வொரு மாநிலத்திலும், அவனுடைய, அவனின் சகோதரியுடைய கல்வி பாதிக்கக்கூடாது என்ற காரணத்தினால் பெற்றோர்களால் பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். எனினும் புதிய ஊர், புதிய மொழி என்ற அவஸ்தையினால் பெரும் போராட்டம் தான் எஞ்சுகிறது அக்குழந்தைகளுக்கு. ஒவ்வொரு ஊரிலும் ஏதோ ஒரு ஆசிரியரோ, நண்பர்களோ, அக்கம்பக்கத்தினரோ உதவ முன்வருவதால் அப்புது மொழியினைக் கற்று குழந்தைகள் தேர்ச்சி பெறுகின்றனர். பெரும் முயற்சி, அவமானங்கள், வலிக்குப் பிறகே!

கிரிக்கு உத்வேகம் கொடுத்து உதவும் ரஜினி, தனக்கு கிடைத்த சைக்கிளை கிரி பள்ளி செல்ல கொடுக்கும் தாபா ஒன்றில் வேலை செய்யும் சோட்டூ, தினமும் பாடம் சொல்லித் தரும் வித்யா அக்கா, கிரியின் முதல் நண்பர்கள் முரளி, நகுல், கோபக்கார ஆசிரியர் என அனைத்தும் நம் மனதில் ஆழமாக பதியக்கூடியவே. கிரி ஒவ்வொரு ஊராக மாறும் போது அவனுடைய கண்ணீர் நம்மை பாதிக்கிறது. அக்குழந்தைக்கு மீண்டும் எப்போது புதிய நண்பர்கள் கிடைப்பார்களோ என்ற ஏக்கம் நமக்கும் தொற்றுகிறது.

ஒரே ஊரில் பள்ளி மாற்றும் போதே குழந்தைகள் சந்திக்கும் சிக்கல்கள் நிறைய. பெரும்பாலும் குழந்தைகளைக் கேட்டு நாம் அந்த மாற்றத்தினை கொண்டு வருவதில்லை. பெரியவர்களின் முடிவு தான். வசிக்கும் வீட்டை மாற்றும் போதும் குழந்தைகள் அவர்களின் ஏக்கத்தினை சொல்வதற்குக் கூட நம்மில் பலர் வாய்ப்பு அளிப்பதில்லை. ஊர் மாறுவதும், பள்ளி மாறுவதும் குடும்பச்சூழ்நிலை போன்ற பல காரணங்களால் என்றாலும், குழந்தைகள் தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்தவாவது குறைந்தபட்சம் இடம் கொடுக்கலாம். கிரியின் வலியை நமக்கு கடத்துவதன் மூலம், அப்புத்தகத்தை வாசிக்கும் பெற்றோர்கள் எந்தவொரு மாற்றத்தினை முன்வைக்கும் போதும் குழந்தைகளின் எண்ணங்களுக்கு மதிப்பு அளிப்பார்கள் என்றே நம்புகிறேன்.

நிறைய மொழி கற்றுக்கொள்வது நல்ல விஷயம் என்று நாம் கருதுவதுண்டு. கிரி தான் செல்லும் ஊரின் மொழிகளைக் கற்றுக் கொண்டாலும் அதனால் அவனுக்கு பெருமை ஏதும் இல்லை என்பது நாம் பேச வேண்டிய கருபொருள். எதற்காக, எப்போது, எப்படி கற்றுக் கொள்கிறோம் என்பதை பொருத்தே ஒரு மொழியினை கற்ற திருப்தி கிடைக்கும். கட்டாயத்தின் பேரிலோ, வேறு வழியில்லாமலோ, சூழல் கைதியாகவோ கற்றுக்கொள்வது ஒருவருக்கு எந்த மகிழ்ச்சியினையும் அளிக்கப்போவதில்லை என்ற உண்மையை சொல்கிறது கிரியின் கதை.

Tuesday, February 17, 2026

கேள்வி நல்லா தான் இருக்கு - 6

ஓவியப் புத்தகத்தில் ஹிட்லரின் படமும் இருந்தது. ஒவ்வொரு பக்கமாக பார்த்துக் கொண்டு வந்தவள் "இவர் படத்தை மட்டும் நான் வரைய மாட்டேன்" என்றாள். காரணத்தை புரிந்துகொண்டதால் நான் அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் கடந்து விட்டேன்.

                                            google images


மறுநாள் வேறு இரு படங்களை வரைந்து விட்டு ஹிட்லரின் படத்தை வரைந்துக் கொண்டிருந்தாள். அதற்கும் நான் எதுவும் கேட்கவோ, சொல்லவோ இல்லை.

வரைந்து முடித்தவுடன்,

"அம்மா, ஹிட்லரோட நிஜ பெயர் என்ன?" என்றாள்.

"அதுல எழுதிருக்கு ல, அடோல்ஃப் ஹிட்லர். அதான் அவரோட பெயர்."

"ஓ, அப்படியா!" என்று ஆச்சரியத்துடன், "இல்ல ம்மா, அந்த பேர மக்கள் தான் அவருக்கு குடுத்தாங்க னு இவ்வளவு நாளா நெனச்சேன்" என்றாள்.

நான் "ஏன் அப்படி நெனச்ச?" என்று கேட்பதற்குள், அவளே காரணத்தையும் கூறினாள்.

"அவரு பேரு ஹிட்லர் ல "ஹிட்" னு இருக்குல, அதனால அது மத்தவங்க வெச்ச பேருனு நினைச்சேன்," என்று சாதாரணமாகச் சொன்னாள். இது வரை இவ்வாறெல்லாம் நான் யோசித்ததில்லையே என்று தோன்றியது.

தொடர்ந்தாள்:

"அம்மா, அவரோட wife இப்படியெல்லாம் தப்பு பண்ணக்கூடாதுனு அவர தடுக்கலையா?"

என் பக்கம் அமைதி மட்டுமே!!

"அவரோட அப்பா, அம்மா அவருக்கு சொல்லலையா, இப்படி செய்யக்கூடாதுனு?"

----------

"சின்ன வயசுல இருந்து அவங்க அப்பா, அம்மா சொல்லிக் குடுத்துருக்க மாட்டாங்களா?"

​​----------

"எப்படித்தான் அவருக்கு இப்படி தோனுச்சோ, இவ்வளவு பேர கொல்லலாம்னு? எப்படித்தான் இந்த மாதிரி எல்லாம் தோணுமோ?"

---------

"இப்படி எல்லாம் செஞ்சதால அவருக்கு ஏதாச்சும் நல்லது கிடைச்சிருந்தாக் கூட சரி, ஆனா யாருக்கும் நல்லது இல்லையே? அப்புறம் எப்படி அவருக்கு இந்த மாதிரி செய்ய யோசனை வந்துச்சு?"

-------

"ஏதாச்சும் சொல்லும்மா."

"ஏன் அவங்க வீட்ல அவருக்கு யாரும் சொல்லலனு தெரியல பாப்பா. நான் அத பத்தி படிச்சிட்டு சொல்றேன்."

(தெரிந்த) வரலாற்றைச் சொல்லிவிடலாம். ஆனால் இவ்வளவு கேள்விகளுக்கு பதில் நான் படித்த புத்தகங்களில் இல்லை. தேடல்... தேடுவோம்....

குட்டி ஆகாயத்தின் புதிய கதை - ஜெனியின் பரிசு

குழந்தைகளின் பிரார்த்தனைகள் என்னவாக இருக்கும்? என்னவாக இருந்தாலும் பெரியவர்களின் அறிவுக்கு எட்டாததாகத்தான் இருக்கும்!! "ஜெனியின் பரிசு...