Monday, March 9, 2026

குட்டி ஆகாயத்தின் புதிய கதை - ஜெனியின் பரிசு

குழந்தைகளின் பிரார்த்தனைகள் என்னவாக இருக்கும்?

என்னவாக இருந்தாலும் பெரியவர்களின் அறிவுக்கு எட்டாததாகத்தான் இருக்கும்!!

"ஜெனியின் பரிசு" என்ற கதையினை படித்த போது அடுத்து இதுவாக இருக்குமோ என்று நான் நினைத்த எதுவுமாக அக்கதை இல்லை. ஜெனியின் எண்ணமும் ஆசையும் பிரார்த்தனையும் வேறாக இருந்தது. அது அழகாகவும் இருந்தது!

"அபியும் நானும்" என்ற திரைப்படத்தில் ஒரு காட்சி உண்டு. வீட்டில் உள்ள அனைவரும் அவ்வீட்டின் உரிமையாளரின் திருமண நாளினைக் கொண்டாட ஐந்து நட்சத்திர உணவகத்திற்கு செல்வர். கிளம்பும் வேளையில் அந்த வீட்டின் குழந்தை அவர்கள் வீட்டில் வேலை செய்பவரையும் (வீட்டில் ஒருவராகவே வாழ்ந்து வரும் நபர்) அழைத்து செல்லலாமா என்று கேட்பாள். சரி என்று அழைத்துச் செல்வர். அங்கு பெரியவர்கள் அவர்களுக்குள்ளே பேசிக் கொள்வர்:

"இவரை அழைத்துச் செல்ல வேண்டும் என்று ஏன் நமக்கு தோணல?"

"அதெல்லாம் குழந்தைகளுக்குத் தான் தோணும். நாம தான் வளந்துட்டோமே!"


"ஜெனியின் பரிசு"ம் அப்படித்தான். அடுத்தவர்களைப் பற்றியும் அவர்களின் தேவைகளைப் பற்றியும் நினைக்கும் குழந்தைகளின் மனது விசாலமானது. அவர்களின் உலகில் ஏகப்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் உண்டு. இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொருவரும் மற்ற யாருக்கோ கிறிஸ்துமஸ் தாத்தாவாகவும் இருக்க முடியும் என்று குழந்தைகள் நமக்கு காண்பிக்கின்றனர்.  அதை இன்று நாம் சுருக்காமல் இருந்தாலே போதுமானது. எதிர்காலத்தில் போர்கள் கூட குறையக்கூடும். 

சிறார் சொன்ன கதை வரிசையில் குட்டி ஆகாயத்தின் புதிய வெளியீடு - ஜெனியின் பரிசு.

குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும்! 💗

No comments:

குட்டி ஆகாயத்தின் புதிய கதை - ஜெனியின் பரிசு

குழந்தைகளின் பிரார்த்தனைகள் என்னவாக இருக்கும்? என்னவாக இருந்தாலும் பெரியவர்களின் அறிவுக்கு எட்டாததாகத்தான் இருக்கும்!! "ஜெனியின் பரிசு...