Tuesday, May 26, 2026

இயல் மின்னிதழில் ஒரு புத்தக அறிமுகம்

சிறார் இலக்கியம் சார்ந்து இணையத்தில் செயல்பட்டு வரும் "இயல்" மின்னிதழில் "கோல்யா சினிட்சனின் நாட்குறிப்புகள்" என்ற ரஷ்ய சிறார் நாவலுக்கு எழுதிய புத்தக அறிமுகம் வாசிக்க 👇

கோடை விடுமுறையின் தேன்துளிகள்: ‘கோல்யா சினிட்சினின் நாட்குறிப்புகள்



இயற்கை, குழந்தைகள், கோடை விடுமுறை - இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து இரசிக்கக்கூடிய நாவல் இது. வாசித்து மகிழுங்கள்! 😎

தேர்தல் பணி - அனுபவம் (2)

ஒவ்வொரு தேர்தலிலும் மனதில் நிற்கும் பல சம்பவங்கள் இருக்கும். அது போன்று தான் இம்முறையும். 💗

2026 சட்டமன்ற தேர்தலின் போது ஒரு அரசு பள்ளியில் தேர்தல் பணியிலிருந்தேன். நல்ல வெயில். பக்கத்துக் கட்டத்திலிருந்த கழிப்பறைக்குச் செல்வதே அந்த வெயிலில் கொடுமையாக இருந்தது. அப்படிப்பட்ட வெயிலில் 85 சதவிகதத்திற்கும் அதிகமானோர் நான் பணியிலிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். இயல்புக்கு மாறாக நிறைய குழந்தைகள் வந்திருந்தனர். பல சுவாரஸ்யங்களை கவனிக்க நேர்ந்தது. 😍

அவற்றுள் மனதை ஏதோ செய்த ஒன்று, இந்த நிகழ்வு. 💖

மதியம் 2 மணி இருக்கும். (வெயிலை மறந்து விட வேண்டாம்) ஒரு அம்மா (65 வயதிருக்கும்) கையில் இரண்டு பைகளுடன் வாக்களிக்க வந்தார். இரண்டு பைகளையும் வாக்குச்சாவடியில் வாயிலில் வைக்கலாமா என்று கேட்ட பின்னர் அங்கு வைத்துவிட்டு உள்ளே வந்தார். தலையினை மொட்டை அடித்திருந்தார். மிகவும் சிரமப்பட்டு, பொறுமையாகச் சென்று வாக்களித்து விட்டு வந்தவர் தான் அரசு மருத்துவமனையிலிருந்து நேரடியாக வருவதாகவும், புற்றுநோய் சிகிச்சை பெற்று வருவதாகவும் சொன்னவுடன் அதிர்ந்தது. கையில் கொண்டு வந்த பையானது மருத்துவமனையிலிருந்து கொண்டு வந்த துணிகள் மற்றும் மருந்துகள் என்றார்.     

ஒரு புற்றுநோயாளி, தன் உடல்நலம் குன்றிய நிலையில், தன்னுடன் துணைக்கு வர எவரும் இல்லாமல், மூட்டை முடிச்சுடன், மருத்துவமனையிலிருந்து நேரடியாக வாக்களிக்க வருவது என்பது என்னால் சற்றும் நம்ப முடியாமல் போயிருக்கும், இதனை நான் நேரில் கண்டிராமல் இருந்திருந்தால்!


அந்த கண்களிலும், உடலிலும், மனதிலும் என்னென்ன ஏக்கங்களுடன், எதிர்பார்ப்புகளுடன் அவர் வந்திருப்பார் என்பதை உங்களால் ஊகிக்க முடிகிறதா!!! 

அவருக்கு அவர் எதிர்பார்ப்பது கிடைக்க அந்த இயற்கையிடம் பிரார்த்திப்பதை தவிர என்னால் வேறு என்ன செய்ய முடியும்!! 💚

கேள்வி நல்லா தான் இருக்கு

 இந்தப் பதிவு கொஞ்சம் தாமதமாக வருகிறது.

“அம்மா, இந்த வாரம் நிறைய விடுமுறை இருக்குமா, ஜாலி,” என்றாள் என் மகள்.

“ஆமாம் பாப்பா. வெள்ளி, சனி, ஞாயிறு மூணு நாள் இருக்கு,” என்றேன்.

“வெள்ளிக்கிழமை என்ன விசேஷம் ம்மா?”

“Good Friday பாப்பா,” என்றேன்.

சற்று நேர அமைதிக்குப் பின்பு;

“அப்போ மத்த Fridays எல்லாம் Bad Fridayவா?” என்றாள் சிரிப்போடு.

“அப்படி இல்ல,. அந்த நாள் Christians க்கு முக்கியமான நாள்,” என்றேன்.

“என்ன முக்கியமான நாள்?”

“அந்த நாள் தான் Jesusஅ சிலுவையில ஆணி வெச்சு அடிச்சிட்டாங்க அவர் அன்னைக்கு இறந்து போய் மூணாவது நாள் திரும்ப உயிரோடு வந்தாரு,” என்றேன்.

“ஒருத்தர் செத்துப் போயிட்டாரு, இல்ல எல்லாரும் சேந்து கொண்ணுட்டாங்க. அது எப்படி Good Friday வா இருக்க முடியும்?”

-------

இயல் மின்னிதழில் ஒரு புத்தக அறிமுகம்

சிறார் இலக்கியம் சார்ந்து இணையத்தில் செயல்பட்டு வரும் "இயல்" மின்னிதழில் "கோல்யா சினிட்சனின் நாட்குறிப்புகள்" என்ற ரஷ்ய ...