Friday, September 26, 2025

யாருடைய துகள் நாம்?

"சீதக்காதி" திரைப்படத்தில் வருவது போன்று "கலைக்கும் கலைஞனுக்கும் மரணமில்லை" தான்.

அதே போன்று நம் முன்னோர்களுக்கும் மரணமில்லை தானே. நம் அம்மா, அப்பா, அவர்களின் பெற்றோர்கள், அவர்களின் பெற்றோர்கள் என எவருக்கும் நிரந்திர மரணமில்லை என்பதை உணர்த்துவதாகத்தான் "அவன் துகள் நீயா.. அவன் தழல் நீயா.." என்ற பாடல் ஒலிப்பதாக எனக்கு ஒவ்வொரு முறையும் தோன்றும்.

நம் ஒவ்வொருவருக்குள்ளும் நம் முன்னோர்களின் நிழல் இருக்கும். அதனை தான் அறிவியல் மரபியல் மூலம் நிரூபிக்கிறது. மரபியல் வழியாக கொஞ்சமும், பழக்க வழக்கங்கள் வழி மிச்சமும் குணநலன்கள் அனைத்தும் கடத்தப்படுகின்றன. 

நான் வெளிப்படையாக இருக்கும் போது "நீ உன் அப்பா வழி தாத்தாவே தான்," என்று சொல்வார்கள். கோபப்படும் போது "உன் அம்மா பெத்த தாத்தா தான் நீ," இப்படி நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் யாரோ ஒருவர் இருக்கத்தானே செய்கிறார். நம் அம்மாவோ, அப்பாவோ, தாத்தாவோ, பாட்டியோ, ஆசிரியரோ, அதிகாரியோ! ஏன் நாம் படிக்கும் புத்தகங்கள், பார்க்கும் மனிதர்கள், இரசிக்கும் ஆளுமைகள், கடந்து செல்லும் உறவுகள், உடன் பயணிப்பவர்கள், நம் விரோதிகள் என எல்லாராலும் ஆனது தான் நாம்! அதனை அப்பாடலின் ஒவ்வொரு வரியிலும் உணர முடியும்.

யாருடைய அடையாளமோ நம்மிடம் இருந்து கொண்டே தான் இருக்கும். அது நல்ல குணநலனா கெட்டவையா என்பது தான் யோசிக்க வேண்டியது. எந்த ஒருவரும் முழுமையாக தனித்த அடையாளத்துடன் இருக்கவே முடியாது. 

நான் யாருடைய துகளெல்லாம் கொண்டுள்ளேன் என்பது எனக்கு ஓரளவுக்குத் தெரியும். நீங்கள் யோசித்திருக்கிறீர்களா!? 

சீதக்காதி - கலை, கலைஞன், மரணம்!

சீதக்காதி என்று ஒரு தமிழ் திரைப்படம். பெரிய வெற்றிப்படம் அல்ல. முதல் பாதியின் ஒரு பகுதி சோகமாகவும், அதனைத் தொடர்ந்து நகைச்சுவையாகவும், இறுதியில் சற்று ஆழமாகவும் எனக்குத் தோன்றிய படம். பிடித்த படங்களில் ஒன்றும் கூட. 

 Avan Lyrics in Tamil, Seethakaathi (Original Motion Picture Soundtrack) Avan  Song Lyrics in English Online on Gaana.com

PC: google images

ஒரு கலைஞன் அவனின் மரணத்திற்குப் பிறகும் வாழ்கிறான். அந்த கலையின் வடிவில் அல்லது அவனைப் போன்ற ஒரு கலைஞனின் உடலில். எதுவாகினும் கலைஞனுக்கு மரணமில்லை. இதுவே அப்படத்தின் மையக்கரு.  இப்பொருள் ஒரு மனிதனின் வாழ்க்கையை ஆழமாக சிந்திக்க வைக்கக்கூடும். அதனை மிகுந்த நகைச்சுவையோடு கையாண்டிருப்பார்கள்.

இப்படத்தில் ஒரு நாடகக் கலைஞர் ("ஐயா" என்று அழைக்கப்படுபவர்) அவரின் மரணத்திற்குப் பிறகு அக்கலையை உண்மையில் நேசிக்கும் இன்னொரு நாடகக் கலைஞரின் ஆன்மாக்குள் புகுந்து, வசித்து தன்னைப் போலவே அவ்வுடலையும்  நாடகக் கலைக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட வைப்பதாக அமைந்திருக்கும். இதை தட்டச்சு செய்யும் போதே ஏனோ எனக்குள் கனமாக உள்ளது. 

அப்படத்தில் ஒரு பாடல்:

"அவன் துகள் நீயா.. அவன் தழல் நீயா.. அவன் நிழல் நீயா.. அவனே நீயா....!!!" (பாடல் முழுமையுமே அற்புதம் தான்!!!) 💖

தனக்கு பின்னர் தோன்றியுள்ள திறமையான நாடகக் கலைஞர்கள் அனைவருக்குள்ளும் "ஐயா" புகுந்துள்ளார். அவரின் துகளும், தழலும், நிழலும் அக்கலைஞர்களிடம் உள்ளது. தன் குருவின் (நேரடியாகவோ, மறைமுகமாகவோ) தாக்கம் சிஷ்யர்களிடம் இருப்பதாக இதை பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். 

கலையும், கலைஞர்களும் அவ்வாறே! இரண்டிற்கும் மரணமில்லை தான்.

ஆனால் இது ஒவ்வொரு தனி நபருக்குள்ளும் நிகழக்கூடியது தானே!! கலைஞர்களுக்கு மட்டுமல்ல!!

தொடரும்.... 

Thursday, September 25, 2025

How do you 'save' your contacts?! 😉

We meet someone for the first time.

We exchange numbers as we interact, not knowing if this acquaintance would grow into a relationship or not.

We save each others' numbers, not knowing if this person would become a friend or foe.😍

We save numbers with their actual names, in fact with partial address so that we do not forget who that person is! 😊

That person happens to grow as a friend. Later as a confidante. Now, do we really change their names in the contact??!! 😌

Yes and No!😃

 Cell Phone Contact List Stock Illustrations – 281 Cell Phone Contact List  Stock Illustrations, Vectors & Clipart - Dreamstime

                                                                                                                          PC: google images

When we are young adults, we do give importance to how we 'save' our contacts. But as we grow into full adulthood and thereon, we do not! 😖

Some names when popped up on screen remind us that we hadn't changed their names to just names or nick names, despite having got closer. Is it because we find it as an extra work to edit contact or we do not give a damn to all such trivial matters, as we grow older?? 😛

Not sure! 😏

But we DO take a few seconds to edit some contacts as they stay closer to our hearts or keep getting closer to that tiny teeny private space within us. Otherwise even though the relationship stays healthy and good, many a time we do not take that effort and that indicates something about us or the other person.

Do we really need to give attention to this fact or is it something we could let pass??😀

I am somewhere in the middle! You? 😉

P.S. There are people who save almost every contact with a nick name, leaving others to wonder who is who when they are forced to use their mobile! That is weird!  😕

Saturday, September 6, 2025

Who Wrote the Indian Constitution? 💭

"Who wrote the Indian Constitution?" - If this question was asked to me, I would have straight away said "Dr Ambedkar", not knowing the difference between wrote & drafted.

For long long years, I did not know that a team of experts were involved in drafting of our Constitution. I think my books in school did not make it clear about the team work. I was taught that Dr Ambedkar drafted the Constitution. He led that team and his role is the most significant and that much one knows. But somehow we miss out on other experts.

This being on one side, it never occurred to me to even think as to how the drafted Constitution was put to paper in the final form. As students we were not supposed to think deeper; instead answers were readily available to all tailor-made questions.

We recently bought a book for our library - Hands That Wrote History - where we get to know that the whole draft of the Indian Constitution was written by Prem Behari Narain Raizada!!!!

google images

Anyone that reads this book would be awestruck to learn that Jawaharlal Nehru called Prem and requested him to write in his own beautiful handwriting. Prem was a calligraphy artist who learnt it from his grandfather. He felt honored to be called by the Prime Minister himself and to be ever given a place in history that "Prem's hands wrote the Constitution." He agreed! You won't believe that this book carries details such as the number of nibs Prem had used to write our 250+ pages of Constitution.

Calligraphy is not considered great anymore as most of this work can be easily done by computers/AI nowadays. Yet, handwriting and beautiful handwriting have their own unique space. This book would tell our kids that one would never know when their talent would be recognized and how!!

It surely is an exciting read for kids and also adults. 

இயற்கையோ, இறையோ !!! 💖

ஒரு நாள் விடியற் காலையில் கிருஷ்ணம்மாள் ஆச்சியை சந்திக்க கிளம்பிக்கொண்டிருந்தேன். பயணத்திலோ தங்குமிடத்திலோ வாசிக்க புத்தகம் ஒன்றை என் பையில் வைத்தேன். அப்புத்தகத்திற்கு ஒரு புக் மார்க்கினை எடுப்பதற்கு அந்த அறைக்குச் சென்று விளக்கு எதுவும் போடாமல் அந்த புக்மார்க் பெட்டில் கைவிட்டு ஒன்றை எடுத்தேன். அது 'தன்னறம்' பதிப்பகத்தினுடையதாக இருந்தது. அதில் எழுதியிருந்தது வினோபாவின் வரிகள்: "when a thing is true, there is no need to use any arguments to substantiate it ."

அந்த இருட்டில் என் கையில் இந்த வரி கிடைத்தது தற்செயல் போன்று இருந்தாலும், எனக்கு நான் வணங்கும் இறையின் அறிவுரையாகப்பட்டது. ஏனெனில் அந்த காலைக்கு முந்தைய இரவு ஒருவரிடம் உண்மையை உரக்கச் சொல்லியே தீருவேன் என என்னுடைய 20 நிமிடத்தை செலவழித்தேன். ஒரு வேளை இயற்கை "நீ ஏன் உன் மூச்சைப் பிடித்திக் கொண்டு செவி சாய்க்க விருப்பமோ எண்ணமோ இல்லாதவர்களிடம் உண்மையை புரிய வைக்க முயற்சித்தாய்?" என்று கேட்பது போன்றே இருந்தது. 

பையில் வைத்துக் கொண்டு பயணப்பட்டேன். ஆச்சியை காணப்போன இடத்தில் மூன்றாவது முறையாக ஏதேச்சையாக ஒருவரை (மனதுக்குப் பிடித்த நாங்கள் மதிக்கும் நபர்) சந்திக்க நேர்ந்தது. அதுவும் இயற்கையின் செயல்தான். ஒத்த எண்ணம் உடையவர்கள் சந்தித்து மகிழ்வது இயல்பாக நடந்துக் கொண்டே இருக்கும் என்பதற்கு சாட்சி.

அவரிடம் அன்பு பாராட்டி அந்த அறைக்குள் நடக்க தொடங்கியவுடன் அவர் "நான் உங்களுக்கு சில புகைப்படங்களைக் காண்பிக்கிறேன்," என்றார். அவர் குறிப்பிட்ட புகைப்படங்களைப் பார்த்துகொண்டே நடந்த என்னிடம் வேறொரு இடத்தைக் காட்டி, "நீங்க அந்த படத்தை முதலில் பார்த்து விட்டு வாங்க. ரொம்ப அருமையா இருக்கும்," என்றார். 

என் பையில் நான் வைத்த புக்மார்க் ஒரு பெரிய புகைப்படமாக என் முன்னால். வினோபாவின் அந்த வரிகள் மட்டும் தமிழில்; "செயல் உண்மையாக அமைந்துவிடுகையில் அதனை மெய்ப்பிப்பதற்கான வாதங்கள் தேவையில்லை."


என்னால் அதிலிருந்து உடனே மீள முடியவில்லை. சுற்றி இருந்தவர்களிடம் நான் பையில் வைத்திருந்த அந்த புக்மார்க்கை காட்டி என் ஆச்சரியத்தைப்பகிர்கிறேன். நம்மைச் சுற்றியுள்ள ஆச்சரியங்களை சரியான வார்த்தைகளில் விவரித்துவிட முடியுமா என்ன!!!

மீண்டும் மீண்டும் இயற்கையோ இறையோ என்னிடம் சொல்ல வருவது ஒன்று தான் என நான் உணர்ந்து கொள்கிறேன். "நீ துன்பப்படுகிறாய், உன் நியாயத்தை கூச்சல் போட்டு சொல்ல நினைக்கிறாய். வேண்டாம், செய்யாதே! உன் உண்மை உனக்காகப் பேசும்!"

இதனை நான் செயல்படுத்துவதற்கு காலமாகலாம். அது வரை நான் கூச்சலிட்டுக்கொண்டே இருக்காலாம். ஆனாலும் இயன்ற வரை இறை எனக்கு அளித்த அரிவுரையை ஏற்று நடக்கத் தொடங்கியதுமே மனது லேசாகத் தொடங்கியுள்ளது.💟

அரசுப் பள்ளி டைரிக் குறிப்புகள் - 5

என் மகள் பயிலும் அரசு பள்ளியில் வளாகத் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்ட போது அங்கு இருந்த ஒரு மரத்தின் ஒரு பகுதியை வெட்ட முடிவு செய்யப்படுவதாக ஆசிரியர்களும் தூய்மைப் பணியாளர்களும் பேசிக் கொள்வதை மாணவர்கள் கேட்டுள்ளனர்.

இவர்களுக்கோ அவ்வாறு வெட்டுவதில் விருப்பமில்லை. ஆசிரியர்களிடம் சொல்லியுள்ளனர். ஆசிரியரோ அதனை வெட்டுவதன் அவசியத்தை எடுத்துக் கூறியுள்ளார். மாணவர்களால் மேற்கொண்டு என்ன பேசுவது, என்ன செய்வது என்று தெரியாமல் விட்டுவிட்டனர். மீண்டும் சற்று நேரம் கழித்து அதே சிந்தனையில் இருந்துள்ளனர்.

"நாம் ஏன் 'மாணவர் மனசு' பெட்டியில் எழுதிப் போடக்கூடாது?" என்று யோசித்துள்ளனர். அனைவரும் ஒப்புக்கொள்ள மாணவர்கள் ஒரு கடிதத்தினை எழுதி அதனை 'மாணவர் மனசு' பெட்டியில் போட்டுள்ளனர்.

 
google images

இச்சம்பவத்தை என் மகள் வீட்டில் சொன்னவுடன் பெருமையாக இருந்தது. ஒன்று மரத்தினை பாதுகாக்க குழந்தைகள் நினைத்துள்ளனர். மற்றொன்று தங்களின் எண்ணத்தை நேரடியாக ஆசிரியர்களிடம் சொல்லியுள்ளனர்; அதனை விடவும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் தங்களின் மனதில் எழும் எதையும் 'மாணவர் மனசு' என்ற பெட்டியில் போடலாம் என்ற அரசின் முன்னெடுப்பினை அக்குழந்தைகள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

இன்று வரை என் எண்ணத்தில் தோன்றும் பிரச்சனைகளை தைரியமாக பேச கற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அதை ஒரு அரசுப் பள்ளி போகிறப்போக்கில் செய்கிறது, அவ்வாறு குறைகளை எழுதிப் போடும் குழந்தைகளை தண்டிக்காமல்! 💗

அரசுப் பள்ளி டைரிக் குறிப்புகள் - 4

ஒரு அரசு பள்ளியின் காலை வழிப்பாட்டின் போது நடந்த சம்பவம்

"மேடம், எனக்கு இவ்வளவு Homework கொடுத்தீங்க..... நான் அடுத்த வருஷம் வேறொரு schoolக்கு பொயிடுவேன்," என்றான் ஒரு ஒன்றாம் வகுப்பு மாணவன்.

"என்னடா சொல்ற?" என்றார் ஆசிரியர்.

"ஆமாம். எனக்கு நிறைய குடுக்குறீங்க," என்றான்.

"யாருடா அப்படி சொன்னது? அம்மாவா அப்பாவா?"

"இல்ல, நானே தான் முடிவு பண்ணேன்."

ஆசிரியருக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் தொற்றிக்கொள்ள பெற்றோரிடம் இதனைப் பற்றிக் கேட்டு தெளிவு பெற்றுள்ளார்.

மேற்குறிப்பிட்ட அனைத்தும் ஜனநாயக வகுப்பறைகளில் மட்டுமே சாத்தியம்.

அப்படியான ஜனநாயகத்தன்மை அரசுப்பள்ளியிலே உள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்வு உள்ளது.

குழந்தையும் தான் நினைத்ததை பேச முடிகிறது. ஆசிரியர்களும் அதனை சரியாக உள்வாங்கும் தன்மையுடன் இருக்கின்றனர்.

                                           google images

இதே சம்பவத்தை ஒரு தனியார் பள்ளியில் நினைத்துப்பார்த்தால், ஒரு ஒன்றாம் வகுப்பு மாணவனால் இதனை சொல்லவும் முடியாது; அப்படியே சொன்னாலும் அது ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளப்படாது என்பது தான் யதார்த்தம்.

 

யாருடைய துகள் நாம்?

"சீதக்காதி" திரைப்படத்தில் வருவது போன்று "கலைக்கும் கலைஞனுக்கும் மரணமில்லை" தான். அதே போன்று நம் முன்னோர்களுக்கும் மரணமி...