Tuesday, October 31, 2023

Tamil Nadu and Drugs: A dangerous road 😕

Tamil Nadu has been excited about the latest movie release of actor Vijay. The expectation, hype and excitement seemed to do more with LCU aka Lokesh (Kanagaraj's) Cinematic Universe. For those who knew nothing about LCU, here is a briefing: Lokesh (the director) in his movie titled "Kaithi" dealt with drugs and a huge drug bust in a metropolitan city of Tamil Nadu and in the climax he hinted audience that it was to be continued. Since then, he has been connecting dots from one movie of his to another and it is one universe (all to do with drugs and gangsters and guns and violence and killings and so on and so forth) where drug busting is the epicentre. That's LCU! Movie lovers, media and the whole public have gone gaga over LCU.

Expectations LCU" | Movies, Movie posters, Poster

On the other hand, Tamil Nadu government has been directing educational institutions across the state for almost a year now to conduct regular checks on drug abuse and insisting to create awareness among youngsters on (negative) effects of drug (ab)use. It has gone to a level where every school/college is expected to conduct at least one awareness programme per month. The Government of Tamil Nadu calls it to be an initiative towards "drug-free" society. Apparently, it is a welcome move. Yet, it raises doubts and concerns if drugs are already readily available in our society and that has forced to implement such drug awareness programmes.

 Interview: On why Tamil Nadu has adopted multi-pronged strategy to counter  the drug menace - The South First

Looking at the above two scenarios, there is a question - Are movies reflecting the current state of Tamil Nadu as far as drugs are concerned? or Are the movies instigating the flow of drugs in the society by hyping it and confusing the audience in understanding heroes and villains in such drug-based movies? In fact, villains of LCU are loved more by the audience.😓😮 A side effect of this whole thing is culture of 'celebrating violence and villainous lead characters.'

Though it is true that any art would reflect what it observes around; it shouldn't turn out to be the other way round for God's sake!! In this case, I am not sure which triggers the other! 😒

Wednesday, October 25, 2023

புத்தகக் கொலு 💖💖💖

கிடைக்கும் வாய்ப்பில் எல்லாம் புத்தக வாசிப்பினை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஆர்வக்கோளாறினால் இந்த நவராத்திரியில் கொலுவில் ஏன் பொம்மைகளுக்கு பதிலாக புத்தகங்களை வைத்து, இதை பார்ப்பவர்களுக்கு புத்தக வாசிப்பின் அவசியத்தினை விழிப்புணர்வாக வழங்கக்கூடாது என தோன்றி புத்தகக் கொலு வைக்கலாம் என்ற எண்ணம் உதித்தது. வீட்டில் வைத்தால் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் மட்டுமே பார்க்க இயலும் (வீடு இருக்கும் இடத்தின் தனிமையினால்). எங்கள் நூலகத்தில் வைத்தால்? அங்கும் அதே நிலைமை தான். ஆனால் ஏற்கனவே புத்தகங்கள் உள்ள இடம் தானே அது என்று எண்ணி நூலகத்தில் வேண்டாம் என்று நினைத்து, அலுவலத்தில் வைத்தால் என்ன என தோன்றிற்று. அலுவலகத்தில் அனைவரும் இதை வரவேற்று ஆளுக்கொரு பொருப்பினை எடுத்துக்கொள்ள முன்வந்தனர் (அவர்கள் அனைவருமே கல்லூரியின் அலுவலகப்பணியாளர்கள் என்பதை நினைவில் கொள்க!)

இதற்கிடையில்: இந்த மாத துவக்கத்தில் 50 வருட பழமையான எங்கள் கல்லூரியில் புத்தக திறனாய்வு எதுவும் இதுவரை நடைபெற்றதில்லை என்பதை அறிந்து வேதனையுடன், ஒவ்வொரு மாதமும் நான் ஒரு புத்தகத்தை எங்கள் கல்லூரி மாணவிகளுக்கு அறிமுகப்படுத்துகிறேன் என முன்வந்து, உரிய அதிகாரியின் அனுமதியுடன் 40 நிமிடத்திற்கு ஒரு புத்தககத்தை (பெண்களின் ஆடை: வரலாறும், அரசியலும்) அறிமுகம் செய்தேன். மாணவிகளின் மத்தியில் பெரும் மகிழ்ச்சி, மற்றும் வரவேற்பு. எனினும் ஆசிரியர்கள் குவிந்துள்ள ஒரு இடத்தில் ஒரு அலுவலகப் பணியாளராகிய நான் இந்த முன்னெடுப்பை எடுத்ததில் ஒரு அரசு அலுவலகத்திற்கே உண்டான சலசலப்பு இருந்ததாக புத்தகக்கொலு வைக்கவிருந்த நாளுக்கு இரண்டு நாள் முன்பு கேள்விப்பட்டு புத்தகக்கொலு எண்ணத்தை கைவிட நினைத்தேன்.

இம்மாதிரி சலசலப்புகள் நாம் செய்ய நினைக்கும் நற்காரியங்களுக்கு தடையாக இருக்கக்கூடாது என என் சக பணியாளர்கள் (அனைவரும் அலுவலகப்பணியாளர்களே!) தொடர்ந்து ஊக்குவித்தனர். நமக்குள் நாம் நன்மையினை தொடர்ந்து செய்வோம் என முடிவு செய்தோம். அதன் விளைவே 20.10.2023 வெள்ளி அன்று எங்கள் அலுவலகத்தில் உள்ள சிறிய இடத்தில் கல்லூரி முதல்வரின் ஒப்புதலுடன் நடைபெற்ற புத்தகக்கொலு. 🙌

கொலு வைக்கும் படிக்கட்டுகளின் விலை அதிகமாக இருந்த காரணத்தினால் என்ன செய்வதென்றி தெரியாமல் நின்றோம். ஒரு நாள் மட்டுமே இடையில் இருந்தது. பின்னர் ஆண்டுதோறும் கொலு வைக்கும் நபர் எவரெனும் இந்த ஆண்டு வைக்காமல் இருந்தால், கொலு படிக்கட்டுகளை பெறுவோம் என முடிவு செய்து, அவ்வாறு ஒருவரை கண்டுபிடித்து, படிக்கட்டுகளை பெற்றோம். அதனை வழங்கியவர் தங்கள் குடும்பத்தில் சிலருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் இவ்வாண்டு வைக்க இயலவில்லை எனவும், அவர்களின் கொலு படிக்கட்டுகள் இவ்வாண்டும் தொடந்து பயன்படுவதே மிக்க மகிழ்ச்சி எனவும் தெரிவித்து வழங்கினார். அதனை எங்களுக்கு தெரிந்தவரை தப்பும் தவறுதலுமாக அமைத்து முடித்தோம்.

ஐம்பது புத்தகத்தினையேனும் அறிமுகப்படுத்த வேண்டும் - வெவ்வேறு எழுத்தாளருடையது - என எண்ணி, ஒவ்வொரு படிக்கட்டும் ஒரு பிரிவாக அமைக்க முடிவு செய்தோம்.


 (1) சிறார் இலக்கியம்

(2) பெண்ணியம் சார்ந்த நூல்கள்

(3) கல்வி சார்ந்த நூல்கள்

(4) இயற்கை, சூழலியல் சார்ந்த நூல்கள்

(5) மொழிபெயர்ப்பு நூல்கள் (பிற மொழிகளில் பெரிதும் கவனத்தை ஈர்த்தவை)

(6) சமகால தமிழ் இலக்கியவாதிகளின் நூல்கள்

(7) விரும்பி யாரேனும் வைக்க நினைக்கும் அவர்களின் விருப்பமான நூல்கள் (எங்கள் கல்லூரி முதல்வர் இரு நூல்களை கொலுவிற்கு வழங்கினார்)

இவ்வாறு 80க்கும் குறைவில்லாத புத்தகங்களை அடுக்கி, சுற்றி பூவினாலும் அலங்கரித்தோம்.  

கொலுவிற்கு வருபவர்களுக்கு பரிசாக என்ன வழங்கலாம் என்று யோசிக்கையில், ஆளுக்கொரு புத்தகம் வழங்குவது சாத்தியமாகாது என எண்ணி, BOOK MARKS செய்து வழங்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம். அலுவலகப் பணியாளர் ஒருவரின் மகள் ஐம்பதுக்கும் மேற்பட்ட BOOK MARKS செய்துத்தந்தார் (ஒரே இரவில்). பின்னர் புத்தக வாசிப்பின் அற்புதத்தை விளக்கும் விதமாக ஆளுக்கொரு வாசிப்பின் மகத்துவத்தை உணர்த்தும் சீட்டினைத் தருவோம் என எண்ணி ஐம்பதினை தயார் செய்தோம். 😍

கொலு அன்று எங்கள் அனைவருக்கும் பெரிதாக ஏதோ சாதித்த மகிழ்ச்சி. இவ்வாறு ஒரு கொலு வைக்கப்பட்டுள்ளது என எந்த அறிவிப்பும் வழங்காமல் வாய்மொழியாக மட்டும் தெரிவித்து வருபவர்களை வரவேற்றோம். அலுவலகத்திற்குள் வந்து கொலுவினை ஒரு கண்டும் காணாமல் சென்ற ஆசிரியர்களும் உண்டு. பார்த்து வாழ்த்தியவர்களும் உண்டு. 50 சீட்டுகளில் 30 சீட்டுகள் மீதம் உள்ளது என்று நான் சொன்னால் கொலு பார்க்க வந்தவர்களின் எண்ணிக்கையை நீங்கள் கணக்கிட்டுக்கொள்ளலாம். 😆

எனினும் இதுவரை புத்தகங்கள் வாசிக்காத, வாசிக்கக்கிடைக்காத ஐவரேனும் கொலுவில் இருந்த புத்தகத்தினுள் தமக்கு பிடித்த புத்தகத்தினை எடுத்துச் சென்று வாசிக்கத் துவங்கினர்.💪

திருப்தியாக நாள் நிறைவடைந்தது. அதனினும் ஆச்சரியம், நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் இன்ஸ்டாகிரம் (Instagram) பக்கத்தில் அன்று இரவு எங்கள் அலுவலகத்தின் கொலு இடம்பிடித்தது. இது எவ்வாறு அங்கு சேர்ந்தது என்பது எங்களுக்குப் புதிரே!  இப்பூவுலகில் நன்மை மட்டும் இவ்வாறு பரவட்டும்! 💖💖💖



Friday, October 20, 2023

Doosra Delivery: Yet another learning 😇

Despite having watched Cricket during the days of Muthiah Muralidharan and Saqlain Mushtaq, I did not equip myself with techniques or intricacies. Till I watched the video (link given below), I did not know there was something called "Doosra" delivery. Though it is not an illegal delivery, it seems to be highly impossible for a bowler to do it straight. That is the not the point here. 😆
 
https://www.youtube.com/shorts/vCjWXqNZ-8k (enjoy this less than one minute video)

Teams (Sri Lanka vs Pakistan) played against each other. Srilankan Team had won the series but were stunned by the unique delivery of balls from Saqlain. As Muralidharan mentions in this video, despite being opponents, despite Saqlain being younger in age, and despite having won the series, it did not stop the former to reach out to Saqlain and ask about his 'mesmering' (doosra) deliveries. 
 
There was no ego in it and so was with Saqlain when he willingly shared his 'unique' technique to one of his opponents. On top of it, Muralidharan confesses that it took him three years to deliver it to perfection. 
 
 Importance of Sports Essay | Health Benefits, Sports for Nation
 
Learning is a continuous process, irrespective of one's success or failure! And this process without EGO is wonderful to experience and to watch as well 😘 
 
Yet another lesson for life from the ground & legends themselves! 💗

Tuesday, October 17, 2023

தோழர் & Politics

Politics - அரசியல்

15ம் நூற்றாண்டு முதல் 'அரசியல்' என்ற வார்த்தை நடைமுறையில் உள்ளது. கிரேக்க மொழியிலிருந்து வந்த இந்த வார்த்தையின் தமிழாக்கமாக 'அரசியல்' என்ற வார்த்தையினை கொள்ளலாம். ஆங்கிலத்தில் Politics என்பதை Art or Science of Government என்று கூறப்படுகிறது. அரசின் அல்லது அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள், மக்களுக்கும் - ஆட்சி புரிபவர்களுக்குமான உறவு, மக்களுக்கான கொள்கையினை உருவாக்குதல், மக்களும், நாடும் செழிப்புடன் இருத்தல், அமைதியான சூழல் ஏற்படுத்துதல் என பல்வேறு பணிகளின் கூட்டு வார்த்தையாக 'அரசிய'லைக் குறிப்பிடலாம். அரசியல் நம் அனைவரின் வாழ்வுமுறை.

அரசியல் என்பது ஒரு கலை. ஒவ்வொரு இடத்துக்கும், ஊருக்கும், நாட்டுக்கும் வேறுபடக்கூடியது. அங்குள்ள மக்களுக்கு, சூழலுக்கு, பொருளாதாரத்திற்கு, சித்தாந்தத்திற்கு, இன்னும் பல காரணிகளுக்கு ஏற்றார்போல் அரசியல் மாறுபடும்.

அதே வேளையில் அரசியல் அறிவியலும் கூட. அதன் கட்டமைப்பு எங்கும் குடிமக்கள் தாம். சில பிரச்சனைகளுக்கு பொதுவான தீர்வும் உண்டு. அதன் மூலப்பொருட்கள் ஒன்று தான். மக்கள்-பொருளாதாரம்-கொள்கை, இதனைச் சுற்றியே அரசியலின் கிளைகள் எங்கும் செயல்படும்.

அரசியல் என்பது மனிதனின் மாபெரும் கண்டுபிடிப்பாகவே எனக்கு எப்போதும் தோன்றும். தன்னை ஒழுங்குப்படுத்திக்கொள்ள அல்லது தன் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளை எதிர்த்து தன்னை விடுவித்துக்கொள்ள அரசியல் தான் முதல் அறிவுசார் கருவி என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. தனக்கென்று ஒரு வரையறைக் கொண்டு, அதை ஆள்வதற்கு ஒரு முறையினைக் கொண்டு, அதில் வரும் இடர்களுக்கு வழிகளை கண்டடைந்து ஒரு நாட்டினை, உலகினை கொண்டு செல்லுதல் என்பது மனிதனின் பெரும் வெற்றியாக நான் காண்கிறேன்.

 தேர்தல் களம்: பெண்கள் ஏன் அரசியல் பேச வேண்டும்? | Election field -  hindutamil.in

அப்படிப்பட்ட "அரசியல்" என்ற வார்த்தையினை ஒரு 'கெட்ட' வார்த்தையாக பாவிக்க தொடங்கியது, மனிதனுக்கு அரசியலில் உள்ளவர்கள் மீது ஏமாற்றமும், கோபமும் வருவதினால் தான் என தோன்றுகிறது. நம் திரைப்படங்களும் "அரசியல் ஒரு சாக்கடை" என்று அடிக்கடி சொல்லி நம்மை நம்பவும் வைக்கிறது. அரசியல் எப்படி "சாக்கடை"யாகும்? அரசியல் என்ற ஒன்று இல்லாமல் போனால் கலவரமும், யுத்தமும் தானே மிஞ்சும்?! அரசியல் சரியாக உள்ளதா இல்லையா என்பது வேறு வாதம். ஆனால் அரசியல் இல்லாமல் இருத்தல் சாத்தியமில்லை.

அதே போல் 'அரசியல்' பண்ணுகிறார்கள் என்ற வார்த்தையும் மிக அதிகமாக பிரயோகிக்கப்படுகிறது. யாரேனும் சூழ்ச்சி செய்தால் இவ்வார்த்தை தான் முதலில் வருகிறது. தனக்குப் பின்னால் யாரேனும் ஏதேனும் செய்தாலோ, பிரித்தாழும் சூழ்ச்சி என்று நினைத்தாலோ, முன்னுக்குப்பின் முரணாக பேசினாலோ, மறைமுகமாக ஏதும் செய்தாலோ, ஒருவருக்கு தீங்கு நேரும் வண்ணம் ஏதும் செய்தாலோ, அவன்/அவள் அரசியல் செய்கிறாள் என சொல்லப்படுகிறது. மேற்குறிப்பிட்டவைக்கு நேரெதிராக நன்மை செய்யும் எந்த செயலும் "அரசியல்" என யாராலும் குறிப்பிடப்படுவதில்லை. அந்த நன்மைக்குள் ஏதோ 'அரசியல்' உண்டோ ('தீங்கு' உண்டோ) என மட்டுமே எண்ணுகின்றனர். 

அரசியலை மற்றுமொரு தொழிலாக (profession) பார்க்கும் பாங்கு இன்று நமக்கிடையில் இல்லை. அதை தீண்டத்தகாத ஒரு தொழிலாகவே பார்க்கின்றனர். சமகால அரசியலில் உள்ளவர்களால் அந்த எண்ணம் மக்களிடையே விரிவடைகிறது. அதனால் நம் குழந்தைகளுக்கும், இளையவர்களுக்கும் அரசியலை அறிமுகப்படுத்த தயங்குகிறோம். ஆனால் உண்மை என்னவெனில் அரசியல் இன்றி இங்கு எதுவும் இல்லை. அரசியல் ஒரு "நேர்மறை"யான வார்த்தை. 👍

தோழர் & Politics

தோழர் & Politics - இந்த இரண்டு வார்த்தைகளும் சமீபத்தில் என்னை சிந்திக்க வைத்தவை. இரண்டுமே 'நல்ல' வார்த்தைகள் தாம். ஏனோ சில நெருடல்கள் எனக்குள் எழுந்துள்ளன. அதை லேசாக பகிரும் பதிவு தான் இது.

தோழர்

என் சிறு வயதில் அடுத்த வீட்டில் வசித்த ஒரு அண்ணா, அக்கா தன்னைவிட வயதில் மூத்த என் அம்மாவை 'சகோ' என அழைத்தது தான் இவ்வாறான மாற்று வார்த்தை உண்டு என நான் அறிந்த நேரம். வினோதமாக இருக்கும். பின்னர் அன்பே சிவம் என்ற திரைப்படத்தில் இடதுசாரியினராகவும், முற்போக்கு சிந்தனைவாதிகளாகவும் இருந்த வீதி நாடகக் கலைஞர்கள் ஒருவரையொருவர் 'சகா' என அழைத்தது அந்த வயதில் தனித்துவமாகத் தெரிந்தது. மேற்படிப்பு நாட்களில் "தோழர்" என்ற வார்த்தையை நிறைய கேட்க/படிக்க நேரியது. ஏனோ இந்த வார்த்தை இடதுசாரி கட்சிகளுடையது என என் மனதில் பதிந்துவிட்டது. தற்போது சமூக செயற்பாட்டுகளில் இருக்கும் போது சிலர் நம்மை தோழர் என்று அழைப்பதுண்டு.  அது எனக்கு வினோதமாகவும், கூச்சத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். நாம் இடதுசாரி கட்சியை சேர்ந்தவரில்லை, நாத்திகவாதியும் இல்லை, முற்போக்கு இயக்கங்களிலும் இல்லை, சமூக செயற்பாட்டிற்காக முழு உழைப்பை போடுபவரும் இல்லை. இப்படி எந்த கட்டமைப்புக்குள் இல்லாதவராக இருந்தும் ஏன் ஒருவர் என்னை "தோழர்" என்று அழைக்கவேண்டும் என்ற கேள்வி எழுந்தது. ஒரு வேளை சே குவேரா அவர்கள் சொன்னது போல் சமூக கொடுமைகளை கண்டு ஆவேசம் கொள்வதால் நம்மையும் "தோழர்" என்று அழைக்கிறார்களோ?

 கலையகம்: #தோழர் - அரச அதிகாரத்தை அசைத்த பழந்தமிழ் வார்த்தை

அதனால் "தோழர்" என்ற வார்த்தையின் வரலாற்றினை தெரிந்து கொள்ள நினைத்தேன். ஃப்ரெஞ்ச் (French) நாட்டில் இருந்த மன்னர்களின், அதிகாரிகளின் அடைமொழிகளைக் (Titles) களைவதற்கு இது போன்ற வார்த்தைகள் முதலில் புழக்கத்தில் வந்துள்ளன. பின்னர் ரஷ்யாவில் புரட்சியின் போது "காம்ரேட்" (Comrade) என்ற வார்த்தை உருவாகியுள்ளது. இது போன்ற வார்த்தைகள் நாடுகளின் புரட்சிகளின் போது "காம்ரேட்" என்பதைத் தழுவி உருவாகி புழக்கத்தில் இருந்துவருகின்றன. அதன் ஒரு தழுவல் தான் "தோழர்" என்ற வார்த்தை. 

இவ்வார்த்தை தமிழ் இலக்கியங்களில் இருந்துள்ளது. 1000 வருடங்களாக இவ்வார்த்தை பயன்பாட்டில் உள்ளது என தெரிய வருகிறது. 'நட்பு' என்ற அர்த்தம் கொண்ட இந்த வார்த்தை தமிழக அரசியலில் பெரும் பங்கு வகித்துள்ளது. இவ்வார்த்தையினை முதன்முதலாக திரு.வி.க. அவர்கள் பயன்படுத்தியுள்ளதாக தெரிகிறது. ஒரு அரசியல் பொற்பொழிவினை மொழிபெயர்க்கையில் இவ்வாறு உபயோகித்துள்ளார். பெரியார் அவர்களும் இவ்வார்த்தியினை களப்பணியாளர்கள், தலைமைகள் என அனைவரும் பயன்படுத்த வேண்டும் என கூறியிருக்கிறார். தன்னையும் தோழர் என்றே அழைக்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார். தலைமைக்கும், தொண்டர்களுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லாமல் ஒரு கட்சி/ஒரு அமைப்பு செயல்பட வேண்டும் என எண்ணி அவ்வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டிருப்பது தெரியவருகிறது. அவ்வார்த்தைக்கு தனி மரியாதையும், பதவியில் உள்ளவர்களுக்கு ஒரு அச்சத்தினையும் ஏற்படுத்தக் கூடியதாக இருந்துள்ளதை வரலாறு தெரிவிக்கிறது. ஒரு இலக்கை நோக்கி பயணிக்கும் அனைவரும் (அனைத்து படிநிலையும்) சமம் என வெளிப்படையாக தெரிவிக்கும் ஒரு மாபெரும் கருவியாக "தோழர்" என்ற வார்த்தை பயன்படுகிறது என கற்றுக்கொண்டேன்.

இன்று இவ்வார்த்தை பொதுவெளியில் பயணிக்கும் பலரும் பயன்படுத்தும் வார்த்தையாக உள்ளது என தோன்றுகிறது. ஒருவரின் அடையாளம் என்ன, சித்தாந்தம் என்ன அறிந்து கொள்ளாமல், மேலோட்டமாக தெரிந்த நபரை "தோழர்" என்று அழைப்பது, மற்றொருவரை எவ்வாறு அழைப்பது என்ற குழப்பத்தில் "தோழர்" என குறிப்பிடுவது, அவ்வார்த்தியினை பயன்படுத்துவதில் ஒரு செல்வாக்கு உள்ளது என காட்டிக்கொள்ள பயன்படுத்துவது, செயற்கையாக பயன்படுத்துவது என இந்த வார்த்தையானது தன் வலிமையை இழக்கிறதோ என தோன்றுகிறது. இவ்வார்த்தையின் அர்த்தம் நீர்த்துப்போகிறதோ என எண்ணம் உண்டாகிறது. 

அவ்வார்த்தை வழக்கொழிந்து போய்விடக்கூடாது என்பதால் அதிகமாக பிரயோகிக்கப்படுகிறது என்ற வாதமும் இருக்கலாம். எங்கள் அளவில் நாங்கள் தோழர்களே என்ற வாதமும்  வைக்கலாம். எப்படியுமே அடுத்தவர் அவ்வாறு அழைக்கப்படுவதை விரும்புகிறாரா என்று தெரிந்துகொள்ளுதல் அவசியம் என்பது என் கருத்து. இவ்வார்த்தியின் வரலாறு இதன் வீரியத்தைக் காட்டுகிறது. அரசியலை ஆட்டிப்படைக்க வல்லமை கொண்ட வார்த்தை என புரிந்துகொள்ள முடிகிறது. அதனை குறைத்து எடைபோடும் எந்த தகுதியும் எனக்கில்லை. எனினும் நம்மோடு பழகுபவர் அனைவரும் நமக்கு "தோழமை" ஆகிவிட முடியாது என்ற அடிப்படை வாதத்தினைக் கொண்டு இவ்வார்த்தை பிரயோகிக்கப்பட்டால் நலம் என்பது என் புரிதல். அவ்வாறு நடத்தல் அவ்வார்த்தையின் வீரியத்தை தக்க வைக்கும் என தோன்றுகிறது. இதற்கு மாற்று சொல் இருந்தாலும் தெரிந்துக்கொள்ள விரும்புகிறேன். 💖

மொட்ட கடுதாசி

  தபால் பெட்டி எழுதிய கடிதம் - எஸ்.ரா.வின் இந்த புத்தகம் சிறார்காளுக்கான நாவல். பெரியவர்களும் வாசிக்கலாம். நம் பழைய நினைவுகளை கிளறச்செய்வதாக...