Tuesday, February 17, 2026

கேள்வி நல்லா தான் இருக்கு - 6

ஓவியப் புத்தகத்தில் ஹிட்லரின் படமும் இருந்தது. ஒவ்வொரு பக்கமாக பார்த்துக் கொண்டு வந்தவள் "இவர் படத்தை மட்டும் நான் வரைய மாட்டேன்" என்றாள். காரணத்தை புரிந்துகொண்டதால் நான் அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் கடந்து விட்டேன்.

                                            google images


மறுநாள் வேறு இரு படங்களை வரைந்து விட்டு ஹிட்லரின் படத்தை வரைந்துக் கொண்டிருந்தாள். அதற்கும் நான் எதுவும் கேட்கவோ, சொல்லவோ இல்லை.

வரைந்து முடித்தவுடன்,

"அம்மா, ஹிட்லரோட நிஜ பெயர் என்ன?" என்றாள்.

"அதுல எழுதிருக்கு ல, அடோல்ஃப் ஹிட்லர். அதான் அவரோட பெயர்."

"ஓ, அப்படியா!" என்று ஆச்சரியத்துடன், "இல்ல ம்மா, அந்த பேர மக்கள் தான் அவருக்கு குடுத்தாங்க னு இவ்வளவு நாளா நெனச்சேன்" என்றாள்.

நான் "ஏன் அப்படி நெனச்ச?" என்று கேட்பதற்குள், அவளே காரணத்தையும் கூறினாள்.

"அவரு பேரு ஹிட்லர் ல "ஹிட்" னு இருக்குல, அதனால அது மத்தவங்க வெச்ச பேருனு நினைச்சேன்," என்று சாதாரணமாகச் சொன்னாள். இது வரை இவ்வாறெல்லாம் நான் யோசித்ததில்லையே என்று தோன்றியது.

தொடர்ந்தாள்:

"அம்மா, அவரோட wife இப்படியெல்லாம் தப்பு பண்ணக்கூடாதுனு அவர தடுக்கலையா?"

என் பக்கம் அமைதி மட்டுமே!!

"அவரோட அப்பா, அம்மா அவருக்கு சொல்லலையா, இப்படி செய்யக்கூடாதுனு?"

----------

"சின்ன வயசுல இருந்து அவங்க அப்பா, அம்மா சொல்லிக் குடுத்துருக்க மாட்டாங்களா?"

​​----------

"எப்படித்தான் அவருக்கு இப்படி தோனுச்சோ, இவ்வளவு பேர கொல்லலாம்னு? எப்படித்தான் இந்த மாதிரி எல்லாம் தோணுமோ?"

---------

"இப்படி எல்லாம் செஞ்சதால அவருக்கு ஏதாச்சும் நல்லது கிடைச்சிருந்தாக் கூட சரி, ஆனா யாருக்கும் நல்லது இல்லையே? அப்புறம் எப்படி அவருக்கு இந்த மாதிரி செய்ய யோசனை வந்துச்சு?"

-------

"ஏதாச்சும் சொல்லும்மா."

"ஏன் அவங்க வீட்ல அவருக்கு யாரும் சொல்லலனு தெரியல பாப்பா. நான் அத பத்தி படிச்சிட்டு சொல்றேன்."

(தெரிந்த) வரலாற்றைச் சொல்லிவிடலாம். ஆனால் இவ்வளவு கேள்விகளுக்கு பதில் நான் படித்த புத்தகங்களில் இல்லை. தேடல்... தேடுவோம்....

கேள்வி நல்லா தான் இருக்கு - 6

ஓவியப் புத்தகத்தில் ஹிட்லரின் படமும் இருந்தது. ஒவ்வொரு பக்கமாக பார்த்துக் கொண்டு வந்தவள் "இவர் படத்தை மட்டும் நான் வரைய மாட்டேன்" ...