Wednesday, May 8, 2024

கேள்வி நல்லா தான் இருக்கு - 2

எஸ். ரா. அவர்களின் "எலியின் பாஸ்வேர்டு" என்ற புத்தகத்தினை எனது ஏழு வயது மகள் வாசித்துக் கொண்டிருக்கிறாள். ஒவ்வொரு வரியிலும் அவளுக்கு என்னிடம் பரிமாரிக்கொள்ள எதோ ஒன்று உள்ளது என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

 எலியின் பாஸ்வேர்டு | Buy Tamil & English Books Online | CommonFolks

அந்த கதை எலிகள் - பாம்புகள் தொடர்பானது. இப்புத்தகத்தில் இதுவரை ஏழு பக்கங்களை மட்டுமே படித்துள்ள எனது மகள் கூறிய இரண்டு விஷயங்கள் ஆழமானவையாக எனக்குப்பட்டது.

ஒன்று, "நாமும் பாம்புகள் தான்." (ஏன் என்று கேட்டதற்கு, வீட்டிற்குள் எலி வந்தால், நமக்கு ஆபத்து இல்லாத போதும் அடிக்க முற்படுவதால் என்று விளக்கினாள்)

இரண்டு, "ராஜா தான் இத கேக்கனும்." (இக்கதையில் அனுமதி பெற்ற பின்னரே எலிகளை கொல்லலாம் என சட்டம் போட்டு அறிவித்த பிறகும் பாம்பு ஒன்று எலியை கொன்று திங்கும். அதனால் சட்டம் இயற்றின ராஜா ஏன் கேட்காமல் இருக்கிறார், அவர் தானே இதை கேட்க வேண்டும் என்ற நியாயமான கேள்வி இயல்பாகவே அவளுக்கு எழுந்துள்ளது)

பெரியவர்களின் எந்த ஒரு குறுக்கீடும் இல்லாமல் வாசிக்கும் சிறுவர்களால் பல கோணங்களில் இயல்பாகவே சிந்திக்க இயலும் என்பதற்கு இன்னுமொரு உதாரணம்.

No comments:

Post a Comment